வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, June 5, 2012

என் அம்மா

கருவினில் வளர
அவள் விருப்பங்களை
தியாகந் செயதாள்................
சேயாய் உருவெடுத்து
உதைத்த போதும்
ஆனந்த கண்ணீர்
விட்டு ரசித்தாள்.........................
மரண வலியிலும்
நான் புவியைக் காண
இன்பமாய் பொறுத்துக் கொண்டாள்...................
பிறந்த பின்னும்
உந்தன் பார்வை எல்லாம்
எந்தன் மீதே செலுத்தினாள்...............
நான் செய்யும்
சிறுசிறு சேட்டைகளையும்
செயல்களையும்
கவலை மறந்து ரசித்தாள்...............
நான் தவழ்ந்த போது
என் முட்டி வலிக்குமென்று
தடவிக் கொடுத்தாள்.............
நான் நடந்த போது
என்னை உச்சி
முகர்ந்து முத்தம் தந்தாள்.............
தன் சோகத்தில் கூட‌
என்னை இன்பமாய்
கவனித்தாள்.........
நான் முதலில் பள்ளி
சென்று வந்த போது
போருக்கு சென்று
வெற்றியோடு திரும்புவனை
வரவேற்பது போல்
வாசலில் இருந்து
என்னை அள்ளி அணைத்து
அன்பை பரிமாறினாள்...
நான் கல்லூரி
சென்ற போதும் கூட‌
எவ்வளவு சாப்பிட்டாலும்
நல்லா சாப்பிடுப்பா
என்று சொல்லி
எந்நலத்தையே கவனித்தாள்................
என் பள்ளி
கல்லூரி தேர்வு
நாட்களிலும்
நான் தேர்வு எழுத‌
உண்ணா  நோன்பு கொண்டு
தன்னையே வருத்தினாள்.............
தான் உடம்பு முடியாமல்
படுக்கையில் இருந்தபோதும்
நீ சாப்பிட்டாயா
என்று என்னை விசாரித்தாள்..................
நான் வேலையில்லாமல்
சுற்றிய போது
என்னை விட‌
கவலைக் கொண்டாள்..............
நான் அழுதபோது
என்னைத் தேற்றி
தனிமையில் நானறியாமல்
அழுது தன்
சோகம் தீர்ப்பாள்..............
திருமணப் பந்ததில்
நுழைந்த போது
என் துணைவி உன்னை
புரிந்துக் கொள்ளவில்லை யென்றாலும்
அன்புடன் நான்
விலகிக் கொள்கின்றேன்
என்று சொல்கின்றாள்...............

என் அம்மா