வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 18, 2014

உறவில் விரிசல்......

உறவுகளில் உறவுகளுக்குள்
 அன்பு நட்பு என்ற
 மலர் மலர்ந்திருக்கும் போது
விஷயங்கள் இல்லாவிடினும்
மணிநேரக் கணக்கில்
செல்பேசியில் உரையாடல்
நடக்கின்றது.....
தலைப்பு எதுவும்
இல்லாமலே
பேசி முடித்தப்பின்னும்
மனதில் சொல்லிமுடியா
மகிழ்ச்சி வருகின்றது......
ஆனால் அந்த உறவுகளில்
அன்பு நட்பு என்ற‌
மலரில் கிழிசல்கள்
உண்டாகும் போது
கடமைக்காக பேச எண்ணினாலும்
உரையாட மனம் விரும்புவதில்லை
பேசும் வார்த்தைகளிலும்
உயிர் இருப்பதில்லை............
பேசி முடித்தப்பின்னும்
மனதில் ஏனோ
இனம்புரியாத வெற்றிடம்
தானாகவே வருகின்றது......

வேண்டும் வேண்டும் காதல் வேண்டும்

காதல் வேண்டும் 
வேண்டும் காதல்
வாழ்கின்ற‌ வாழ்க்கையினை அனுபவித்திட‌
வாழ்வில் காதல் வேண்டும்
நமக்காய் வாழ்வோரை நேசித்திட‌
காதல் வேண்டும்
இயற்கையினை காத்திட அதனை
ரசிக்கும் காதல் வேண்டும்.....
நாம் செய்யும் பணியினை நேசிக்க 
காதல் வேண்டும்
இலட்சியத்தில் முன்னேறிட 
கனவுகளில் காதல் வேண்டும்.......
எண்ணியதை அடைந்திட விடா
முயற்சியில் காதல் வேண்டும்............
இறந்தபின்னும் வாழ்ந்திட அனைவரையும்
நேசிக்கும் காதல் வேண்டும்...........

போதை போதை.........

தெருவில் தனியாக 
சென்றுக் கொண்டிருந்தேன்.
மனதில் சிந்தித்துக் கொண்டே.....
வாகனகங்கள் இருபுறமும்
ஒன்றையொன்று முந்துவதில்
போட்டி போட்டுக் கொண்டு
சென்றுக் கொண்டிருந்தன‌....
மனித தலைகளும் 
முண்டியடித்து சென்றன‌....
சாலை ஓரத்தில்
எதையுமே பொருட்படுத்தாது
எதையுமே காண முடியாது
போதையில் ஒரு ஜீவன்
உறங்கியதா அல்லது மயங்கியதா
என்றுத் தெரியாமல்
தன்னிலை மறந்து 
படுத்துக் கிடந்தது.....
போதை போதை 
அவன் உண்ட போதை
இப்போது அவனையே உண்டு
அவனையே மேற்கொண்டு விட்டது....
என் மனமோ சிந்தித்தது..
போதை போதை....
இவன் குடித்த போதை
வெளிப்படையாக எல்லோருக்கும்
தெரிந்தது... ஆனால் 
ஒவ்வொரு மனிதருமே
போதையை தேடித் தான்
வாழ்கின்றனர் 
தேடும் வரைக்கும் போதை
தேடியது கிடைத்த‌ போதோ
போதை நம்மை 
மேற்கொள்ளும் என்றது என்மனம்
ஆம் உண்மைத் தான்.........
படிக்கும் மாணவர்க்கு
தேர்வில் நல்நிலையில் 
ஜெயிக்க வேண்டுமென்ற போதை....
படித்து முடித்தோர்க்கு
உயர் ஊதியத்தில் வேலை
கிடைக்க வேண்டுமென்ற போதை..........
வேலையில் உள்ளோர்க்கு
அழகான மனைவி 
கிடைக்க வேண்டுமென்ற போதை........
பணமில்லாதவர்க்கு
வாழ்வில் அனுபவிக்க‌
பணம் வேண்டுமென்ற போதை......
பணமிருப்போர்க்கு
பணத்தை செலவழிக்க 
வேண்டுமென்ற போதை....................
எல்லாம் சலித்தோர்க்கு
இறை வழியில்
அமைதி வேண்டுமென்ற போதை...........
வியாதியில் இருப்போர்
வாழ்வினை முடிக்கவெண்ணி
மரணம் வேண்டுமென்ற போதை.....
எல்லாம் கிடைத்து விட்ட போதோ
உலக வாழ்வு முடிந்து
வாழ்ந்த அர்த்தமில்லாமல்
வெறும் போதையோடு
போதை நம்மை மேற்கொண்டு
இதயத்தை நிறுத்துகின்றது........
பணம் படிப்பு
பதவி ஆடம்பரம் 
இருந்தாலும்  உயிரெனும்
போதை இல்லாவிட்டால்
யாரும் பிணமே...............
உண்மைத் தான் 
ஒவ்வொருவருமே ஒரு 
நாள் நம்மையும்
போதை மேற்கொள்ளுமென்று
தெரியாமல் போதையினை
தேடிக் கொண்டுதானிருக்கின்றோம்.............

வாழ்க்கை அதன் பாதையில்......

வாழ்வில் உயர‌  வேண்டுமென்ற‌
கனவுகளும்
வாழ்க்கையில் முன்னேற‌
எடுக்கும் முயற்சிகளும்
தொடர்ந்து தொடராய்
சென்று கொண்டேயிருந்தாலும் 
வாழ்க்கை
அதன் பாதையில்
எவ்வித‌ சலனமில்லாமல்
சென்றுக் கொண்டிருக்கின்றது
வாழ்வினை 
மாற்றயெண்ணி செய்த‌
முயற்சிகளும் செயல்களும்
அனுபவ‌ பாடங்களை 
கற்பித்து விட்டு
மனதில் ஏனோ
தோற்று விட்டோமென்ற
சோகங்களை மட்டும் 
விட்டுச் செல்கின்றது .....
ஆனால் வாழ்க்கை
அதன் பாதையில்
தான் விரும்பியபடியே......

தமிழ் நண்பர்கள் தளம்


நட்பு உள்ளங்களை இணைக்கும் தளமிது,
நட்பின் எண்ணங்களை பரிமாறும் தளமிது,
தமிழினை சிறப்புறச் செய்யும் தளமிது
கவிதை கதை இன்னும் எத்தனை எத்தனை
சுவைகளையும் தரும் ஒரே தளமிது!
எங்கள் மனதின் எண்ணங்களை 
எழுத்து ருவங்களாக்கி அதனையும்
வெளியிடும் இனிய‌ தளமிது!
முகமறியா கவிஞர்களையும
அறியச் செய்த‌ தளமிது.......
புகழான‌ சாமியார்களையும்
அறிமுகம் செய்த‌ தளமிது!
ஆரோக்கியமான விவாதங்களையும்
களங்கண்ட‌ தளமிது....
எத்தனையோ குடும்ப‌ விஷயங்களுக்கும்
ஆறுதலினைத் தரும் தளமிது...!
பல‌ இடங்களிலிருந்தாலும்
 தமிழால் ஒன்றினைக்கும் தளமிது...
கல்லூரி நண்பர்கள் போல் 
அனைவரும் அரட்டை அடிக்கும்
இன்ப‌ தளமிது............
தமிழில் பதிவிடுவதையும்
எளிதாக்கி தரும் தளமிது....... 
அது தான் எங்கள்
தமிழ் நணபர்கள் தளம்...........
தமிழால் இணைந்தோம்.......
தமிழ் நண்பர்கள் தளத்தால்
நண்பர்களானோம்....................
நட்பினைத் தொடருவோம்...
தமிழிருக்கும் வரைக்கும்
இன்னும் வளரும் தளமிது.....

/உண்மையான நட்பு (இணையத்திலிருந்து) :

இணையத்தில் படித்து, பதிவிடத் தூண்டியது:

 " ஈழப் போரின் போது இரண்டு தோழிகள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருத்தி மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தாள்.. நான் என் தோழியை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றாள் அவளின் தோழி,.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் தோழியினை காப்பாற்ற ஓடினாள் , அவளை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவளுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவளை தூக்கி கொண்டு வந்தாள். களமுனை மருத்துவ போராளி அவளை பரிசோதித்து பார்த்தார் அவள் தோழி தாய் நாட்டிற்காக வீரமரணம் அடைந்து இருந்தாள். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவளை காப்பாற்றப்போவத ால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.
நான் போனது தான் சரி அக்கா என்றால் அவள் . என்ன சொல்கிறாய் உன் தோழி இறந்து கிடந்தாள் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் தோழி உயிருடன் தான் இருந்தாள் அக்கா.”என்னைக் காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் அக்கா இறந்தாள் என் உயிர் தோழி .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் அக்கா இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை எனறாள் .! இதுதான் உண்மையான நட்பு...! இதுதான் விடுதலைப்புலிகள் ...! "
பதிந்தவர் :  @ஈழ மைந்தன்

 இணைய முகவரி :      http://www.tamilwaiting.com/2014/02/kaddu5444.html