வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, August 19, 2016

விழிகளின் அழகு





மொட்டை மாடியில்
அன்னாந்து பார்த்து
ஒற்றையாய் வீற்றிருக்கும்
வெண்ணிலவை ரசித்து
கொண்டிருந்தேன்!
இருளில் மின்னல்
கீற்றாய் வெளிவருவது போல
இமைகளில் இருந்து
சீறி வந்திடும்
விழிகளை கண்டவும்
தன்னிலை மறந்தேன்!!
விழிகளா இல்லை
விீழ்த்திடும் வலையா
விழிகளில் தெரிவதை 
அறிய நினைத்தேன்
ஆனால் இறுதியில்
எனக்கென்ன ஆனது
என்றே அறியாதவனாய்
மூழ்கிவிட்டேன்
விழியெனும் அலைகளுக்குள்!!!
கரும்விழிகளுக்குள்
தெரிந்திடும்
ஒளிக் கீற்று
காண்பவரை யெல்லாம்
மெய் மறக்க செய்கின்றதே
நின் விழி பேசிடும்
மொழிகளுக்கு
அர்த்தம் தெரியவில்லை
எனக்கு

Friday, August 12, 2016

இது தான் வாழ்க்கை


அழகாய் ரோஜா மலரிருக்க
முள்ளை கவனிப்பதும் ஏனோ????
அழகாய் நிலவு இருக்க
இருளை கவனிப்பதும் ஏனோ?????

தென்றலாய் வனம் இருக்க
தனிமையை கவனிப்பதும் ஏனோ????
வாழ்க்கையில் நிறைகள் நிறைந்திருக்க
குறைகளை மட்டும் கவனிப்பதும் ஏனோ?????

வாழ்ந்திடும் வாழ்க்கையில்


குறைகளை யல்லாது


நிறைகளை கண்டு


ரசித்து மகிழ்ந்து


தானும் மகிழ்ந்து


பிறரையும் மகிழ்விப்பதுவே


சிறப்பான வாழ்க்கை


யுகாயுகங்கள் மனிதனை
படைத்திடும் இறைவனால் கூட
இன்னும் குறைகளில்லாத
மனிதர்களை படைத்திட
இயலவில்லை என்பதும்
இறைவனின் குறை தானே!!!

கருவில் இன்னும் தோன்றாதவனே
குறைகளில்லாத மனிதன்
குறைகளை கண்டு கண்டு
நிறைகளை பாராது
மனம் வெறுப்பதும் ஏனோ?????????

வாழ்க்கையை அழகான
கட்டிடமாகவும் மாற்றலாம்
நிறைகளை மட்டும் கண்டால்!!!!
அழகான கட்டிடமான வாழ்க்கையை
அழித்து சிதைத்து
குப்பை மேடாகவும் மாற்றலாம்
குறைகளை மட்டும் கண்டால்!!

துடித்திடும் இருதயம்
நின்றிடும் வரையிலே
வாழ்க்கை என்பதை மறந்து
நிறைகளை பாராது
குறைகளை மட்டும் கண்டு
தானும் வெறுத்து தன்னை
பிறரும் வெறுக்க செய்திடும்
இழி வாழ்க்கை தேவையா????????

வார்த்தைகள்

வீழ்ந்தவனையும்
மீண்டு எழ
வைத்திடும் சிலரின்
வார்த்தைகள்!!!

அழுபவனையும்
ஆறுதல்படுத்திடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!!

குழப்பத்தில் இருப்பவனையும்
தெளிய வைத்திடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!

துயரத்தில் இருப்பவனை
தேற்றி ஆறுதலாக்கிடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!

வார்த்தைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

சிலரின் வார்த்தைகள்
துயரத்தில் ஆழ்த்தும்!
சிலரின் வார்த்தைகள்
நிற்பவனையும் சோகத்தில்
ஓய்த்திடும்!!!

சிலரின் வார்த்தைகள்
சிரிப்பவனையும் சிந்திக்க
வைத்திடும்!!

சிலரின் வார்த்தைகள்
மென்மையான இதயத்தையும்
பட்டயமாய் குத்தி கிழித்திடும்!!

Tuesday, August 2, 2016

தமிழீழம் & தமிழகம்


என் அண்ணன்
ஆண்ட தமிழீழத்தில்
சிந்தனையை தூண்டிட
நூலகம்




                                  தமிழகத்தில்
                                 சிந்தனையை முறிக்க
                                  மது கடைகள்.....