வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, September 26, 2016

அஹிம்சை மரித்த தினம் இன்று :::


அஹிம்சை மரித்த தினம் இன்று :::

தமிழீழ மக்களுக்காய்
தமிழீழ மக்களின்
சுதந்திரத்திற்காய்
எவ்வழியிலும் புலிகள்
போராடுவார்கள் என்பதை
அண்ணன் திலீபனின்
அஹிம்சை போராட்டம்
உலகிற்கு உணர்த்தியது!!!!!

                               



 தமிழீழத்தின்
குறைந்த  பட்ச
கோரிக்கைகளுக்கு
கூட செவிசாய்க்காது
அஹிம்சையால்
சுதந்திரம் பெற்ற
இந்திய அரசு
அஹிம்சை வழி
போராட்டத்திற்கு
மதிப்ப ளிக்காது
எம் அண்ணனின்
உயிர் பிரிந்த தினம் இன்று!!!!








அடக்கு முறைகளுக்கும்
இனவெறி அரசியலுக்கும்
அஹிம்சை அல்ல
ஆயுதமே தீர்வு
என்பதை மரணத்தின் மூலம்
சொல்லிச் சென்றார்
அண்ணன் திலீபன்!!







அன்றைக்கு அண்ணனின்
உயிர் பிரிந்ததை
கண்டு தமிழீழ மக்களின்
கண்ணீரால் நனைந்தது ஈழம்!!

இன்றும் அண்ணா
உன் மரணத்தை எண்ணிடும்
வேலையில் நெஞ்சமெல்லாம்
வலிக்கின்றது இன்னும்
நீ போராடிய இலட்சியம்
அடைய முடியவில்லை யென்று
இன்று
உலகில்
அஹிம்சை மரித்த தினம்!!!!

Wednesday, September 21, 2016

அஹிம்சையின் மரணம்............

அஹிம்சையால்
சுதந்திரம் பெற்ற
இந்தியா அன்றைக்கு
ஈழத்தில்
எம் அண்ணன்
உணவும் இல்லாது
நீரும் அருந்தாது
அஹிம்சை
போராட்டம்
நடத்தியப் பொழுது
கொஞ்சமும்
செவி சாய்க்கவில்லை
இந்தியா!!


அன்று
மரித்தது
அண்ணன் திலீபன்
மட்டுமல்ல
இந்தியாவில்
அஹிம்சையும் தான்!!!

மகிழ்ச்சியான குடும்பம்

குடும்பமெனும் உறவு
செழித்து வளர
தினந்தோறும் தேவை
அன்பெனும் உயிர்
காதலெனும் காற்று!!

நீயா நானா
என்பதில் அல்ல
நாம் என்பதிலேயே
அடங்கியிருக்கு
குடும்பத்தின் மகிழ்ச்சி!!!!
யார் ஜெயிப்பது
என்பதில் அல்ல
யார் விட்டுக் கொடுப்பது
என்பதே குடும்பத்தின்
சந்தோஷம்!!!

நட்பிற்காய்

நட்பிற்காய்
ஆசையாய்
உருகின்றேன்
சிதைகின்றேன்
விருப்பத்தோடு
காத்திருக்கின்றேன்
ஆனால்
நட்பை
பார்க்க கூட
முடியா உயரத்தில்
அவன்(ள்)


ஈழத்தில் இந்தியா

திலீபன் அன்றைக்கு
தன்னை உருக்கி
ஹிந்தியத்தின் முகத்திரையை
நீக்கி உலகிற்கு
அடையாளங் காட்டினார்!!




இன்றும் ஈழத்தில்
தொடர்கின்றது
ஹிந்தியத்தின்
அடக்குமுறை ஆதிக்கம்

அன்பு அன்பு

அன்பு அன்பு
மனிதரின் சிறந்த
பண்பே அன்பு!!!
சிறந்த அன்பு
நேசிப்பவரின் குறைகளையும்
தாங்கி கொள்ளும்!!!
சிறந்த அன்பு
நேசிப்பவரின் குற்றத்தையும்
ஏற்றுக் கொள்ளும்!!!
சிறந்த அன்பு
தனிமையிலும் நேசிப்பவரை
நினைவில் கொள்ளும்!!!!






சிறந்த அன்பு
நேசிப்பவரையும் வாழ்வில்
உயர்த்த எண்ணிடும்!!!!
சிறந்த அன்பு
என்றும் பொறாமை
கொள்ளாது!!!
சிறந்த அன்பு
என்றும் சுயநலம்
சிந்திக்காது!!!
சிறந்த அன்பு
புறங்கூறாது
பொய் சொல்லாது!!!
சிறந்த அன்பு
நிஜத்தில் மட்டுமல்ல
நிழலிலும் நேசிக்கும்!!!!

உன்னைப் பார்த்த பின்பு :

உன்னை பார்த்த பின்பு

என்னில் உன்னை
தேடுகின்றேன்

என்னில் உன்னை
ஆராய்கின்றேன்


என்னில் உன்னை

ரசிக்கின்றேன்






என்னில் உன்னை
காண்கின்றேன்


நான் நீயாய்
வாழ்கின்றேன்


உந்தன் சுவாஷமாய்
காதல் இருப்பதால்!!!

விழிகள்.........




பெண் இவளின்
விழியில் தெரிவது
வழியல்ல
ஆண்களின்
வாழ்க்கை பாதை

தென்றலே உனை எதிர்ப்பார்த்து...

தனிமையிலே 
எந்தன் தனிமையிலே
வயக்கா ஓரத்திலே 
அமர்ந்திருந்தேன்


அத்தை மக
உன்னை நினைச்சி
தென்றலாய் வந்து
மென்மையாய்
மாமன் மகன் என்னை
கட்டியணைச்சி தான்
காதலை தான்
சொல்லுவேனு






தவிச்சிட்டு தான்
நானும் உட்காரயிலே
புயலாய் வந்து
நீட்டினாயே
உன் கல்யான
பத்திரிக்கையை


அத்தை மக உன்னை
தென்றலாய் நினைச்ச
இந்த மாமனோட மனசும்
சில்லுசில்லாய் உடைந்தடி
கண்ணாடியாய்!!!!!!

என் காதல்

தனிமையில்
உற்ற துணையாய்
அழுகையில்
உற்ற ஆறுதலாய்






குழப்பத்தில்
நல்லதொரு தெளிவாய்
என்றும் என்னுள்
என் காதல்

Friday, September 16, 2016

நதி அரசியல்


 மனிதர்களின்
சுய நலத்தினால்
இயற்கை வளங்கள்
சுருங்கியது அழிந்தது
காட்டினை அழித்து
நிலத்தை பெருக்கினான்
நீர்நிலைகளை அழித்து
வசிப்பிடாங் களாக்கினான்

மனிதர்களின்
சுய நலத்தினால்
இயற்கையை அழித்தவர்களால்
மீண்டும் அந்த
இயற்கையினை
உருவாக்கிட இயலவில்லை!!

பதவியாசையுள்ள
மனிதர்களுக்கு கிரீடமளித்து
மகிழ்ந்தனர் பாமரர்கள்
ஆனால் அப்பெருமக்கள்
செய்த தவறுகளால்
இன்று அல்லல்படுவது
பாமரர்களே!!

வனங்கள் அழிந்தன
ஆறுகள் மறைந்தன
நதிகள் ஒழிந்தன
பதவிக்காக
போராடும் பெருமக்களுக்கு
நதியும் ஒரு அரசியலே

எட்டு மாதங்களுக்கு
முன் வெள்ளத்தில்
மிதந்த நாம்
இன்று தண்ணீர்க்காக
வெளி மாநிலத்தில்
கையேறு நிலையில்
இருக்கின்றோம் என்றால்
தவறு அரசியலிலா????
தொலை நோக்குப்
பார்வையில்லாத
ஆட்களுக்கு கிரீடம்
சூட்டிய மக்களிலா????????

நதிக்கரையோரங்களில்
அன்று வளர்ந்தது
நாகரீக சமுதாயம்
ஆனால் இன்று
நதி அரசியலினால்
அழிகின்றது
பாமர மக்களின்
வாழ்க்கை!!

ஓடும் தண்ணீரில்
எழுதும் வாக்குறுதிகள்
போன்றே உள்ளது
இன்றைய அரசியல்
நதியில் அரசியல்
செய்கின்றது பாமர
மக்களை அடித்து!!!!


      ****************************************************

முன்பெல்லாம்
அரசியல் ஒரு
சாக்கடை என்று

சொல்லி ஒரு
குறுகிய வட்டத்துள்
அடைத்தார்கள்
இன்று அந்த
சாக்கடை
பெருகி பெருகி
நதியாகி உள்ளது
காலத்தின் மாற்றத்தால்


Sunday, September 11, 2016

காதல் வந்தாலே (பாகம் 3)

** காதல் வந்தாலே **
படிக்கும் கல்வியில்
காதல் வந்தால்
முதலிடம் பெறலாம்!!
பழகும் நபர்களிடம்
காதல் வந்தால்
நட்பில் சிறக்கலாம்!!
செய்திடும் பணியில்
காதல் வந்தால்
மேன்மை அடைந்திடலாம்!!
உள்ளத்தை நேசிக்கும்தோழமையில்
காதல் வந்தால்
சிறந்த வாழ்க்கை
துணையை பெற்றிடலாம்!!!

இல்லறத்தில்
காதல் வந்தால்
குடும்பம் கோவிலாகலாம்!!
பிள்ளைகளிடத்தில்
காதல் வந்தால்
குடும்பம் பூந்தோட்டமாகும்!!!
முயற்சியில்
காதல் வந்தால்
வெற்றி அடைந்திடலாம்!!
எண்ணத்த்தில்
காதல் வந்தால்
சிறந்த மனிதனாகலாம்!!
சமூகத்தில்
காதல் வந்தால்
சிறந்த தலைவராகலாம்!!!!
காதல் வந்தாலே
மாறாத மனமும்
மாறிடுமே
அழகிய மலராய்
காதல் வந்தாலே
கந்தக மனமும்
மாறிடுமே
மனந்தரும் மல்லிகையாய்!!
காதல் வந்தாலே
பாறை மனமும்
மாறிடுமே
அல்லிதழ் இலையாய்!!!

காதல் வந்தாலே (பாகம் 2)

** காதல் வந்தாலே **
காதல் வந்தாலே
எரித்திடும் ஆதவனையும்
பார்க்க துடிக்கின்றது
காதல் வந்தாலே
விழுந்திடும் சருகுகளையும்
ரசிக்க விரும்புகின்றது
காதல் வந்தாலே
இருளிலும் இனிமை
காண முடிகின்றது
காதல் வந்தாலே
முடியாத செயலெல்லாம்
முடிகின்றது விரைவாக!!!
காதல் வந்தாலே
மெல்லிசையையும் மனம்
ரசிக்க முடிகின்றது!!
காதல் வந்தாலே
நட்புக் கூட்டத்தின்
ஆதரவை ஏற்கின்றது!!
காதல் வந்தாலே
மணிப் பொழுதுகளெல்லாம்
நொடிகளாய் கரைகின்றது!!
காதல் வந்தாலே
கல்லூரி பாடவகுப்புகளும்
இனியதாய் மாறுகின்றது!!
             
காதல் வந்தாலே
வாழும் வாழ்க்கையினை
அழகாக்கும்
காதல் வந்தாலே
சுமையான வாழ்க்கையையும்
சுமையான பயணமாக்கிடும்!!
காதல் வந்தாலே
கடல்போன்ற வாழ்வில்
வெற்றி முத்தெடுக்க செய்திடும்!!
காதல் வந்தாலே
முட்காடாய் வாழ்விருந்தாலும்
பூந்தோட்டமாய் எண்ண செய்திடும்!!
காதல் வந்தாலே
ஓலைக் குடிசையிலும்
வாழ செய்திடும் சிறப்பாக!!!!

காதல் வந்தாலே (பாகம் 1)



காதல் வந்தாலே
கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாகின்றது!!
காதல் வந்தாலே
சுவைகள் எல்லாம்
மாறிவிடுகின்றது!!
காதல் வந்தாலே
நட்பின் கூட்டத்திலும்
தனிமையை நாடுகின்றது!!
காதல் வந்தாலே
விண்ணை பார்த்து
பேச வைக்கின்றது!!!
காதல் வந்தாலே
எதிர்ப்புகளை எதிர்க்க
துணிவு கொள்கின்றது!!!
காதல் வந்தாலே
தீய பழக்கமெல்லாம்
மாறி நல்லவனாக்குகின்றது!!
காதல் வந்தாலே
கடிகார   நொடி முள்ளும்
யுகங்களாய் தெரிகின்றது!!
காதல் வந்தாலே
சாலையோர பூக்களையும்
ரசிக்க வைக்கின்றது!!
காதல் வந்தாலே
பழைய திரைப்பட மெல்லடியையும்
கேட்க தூண்டுகின்றது!
காதல் வந்தாலே
கடினமான செயலெல்லாம்
எளிதாய் தோன்றுகின்றது!!
காதல் வந்தாலே
வெறுப்பு களெல்லாம்
விருப்பமாக தோன்றுகின்றது!!!
காதல் வந்தாலே
யோக நிலையில் மெய்
மறக்க செய்கின்றது!!
காதல் வந்தாலே
விழிகள் திறந்திருந்தாலும்
கனவு காண வைக்கின்றது!!
காதல் வந்தாலே
குழந்தைகளையும்
கொஞ்சிட தோன்றுகின்றது!!!!
காதல் வந்தாலே
பசி மறக்க செய்து
ருசி மறக்க செய்கின்றது!!!
காதல் வந்தாலே
துயரிலும் மறவாமல்
புன்னகைக்க செய்கின்றது!!!
காதல் வந்தாலே
மனதில் துணிவும்
முகத்தில் அழகும் வருகின்றது!!!

Saturday, September 10, 2016

நான் யார்????????????

நான் என்று சொல்வதில் 
பெருமை அடைகின்றேன் 
நான் மட்டுமே.......
பிறர் என்னை
பெருமை பாராட்டுமளவிற்கு
சாதித்திட முயன்றேன்
ஓடினேன் உழைத்தேன்
ஆனால் முடியவில்லை.....
நான் யார் 
எனக்குள் நானே
கேட்டு கேட்டு என்னை
நானே தேடுகின்றேன்
இன்னும் ஆரம்பம் கூட‌
காண வில்லை என்னுள்!

என்னுள் ஒன்றுமில்லை
என்னால் ஒன்றுமில்லை
என்னால் எண்ணியதை
நானே அடைய முடியவில்லை!

என்னால் நினைத்ததை
என்னால் மறக்க இயலவில்லை!
என்னால் தொடர்ந்ததை
என்னால் விட முடியவில்லை!

நான் யாரென்று
எனக்கே புரியவில்லை..
புரிந்திடத் தான் தேடுகின்றேன்
எனக்குள் நானே
விடைகளுக்குப் பதிலாக‌
இன்னு மதிகமதிகமாக‌ 
கேள்விகளே வருகின்றது....

நினைவுகளை தடுத்திட‌
முயல்கின்றேன் முடியவில்லை
நடந்ததை மறந்திட‌
முயல்கின்றேன் முடியவில்லை
நடக்கப் போவதை
நினையாம லுமிருக்க‌
முயல்கின்றேன் முடியவில்லை!
நடக்க போவதை மாற்றயென்னி
முயல்கின்றேன் முடியவில்லை!

எனக்குள் நானே
தேடுகின்றேன் என்னை 
தேடித்தேடி பல புதிய‌
விஷயங்களையும தெரிந்திட‌
செய்கின்றேன் ஆனாலும்
என்னை ய‌றிந்திட
முயல்கின்றேன் முடியவில்லை!


என் பிறப்பும்
நானறியாமல்
என் இறப்பும்
நானறியாமல்
நடந்தால் இவ்வாழ்க்கையில்
நான் யார்?????
எனக்குள் நானே
தேடுகின்றேன் என்னை
விடையில்லா கேள்வித்
 தான் வாழ்க்கையா...
காணமுடியாத புதிர்த்
தான் வாழ்க்கையா......

Wednesday, September 7, 2016

என்ன மாயம் செய்தாயோ!!

என்ன மாயம் செய்தாயோ
என்னிதயம் எனக்காய்
துடித்தாலும் 

உன்னை நினைத்தே
துடிக்கின்றதே!!!!!


என்ன மாயம் செய்தாயோ

விழிகளில் எல்லாம்
உன்னுரு மட்டுமே
நிஜமாய் தெரிகின்றது!!!


என்ன மாயம் செய்தாயோ
பசியும் மறந்து
நினைவையும் இழந்து
உன்னையே நினைக்கின்றேன்……..


என்ன மாயம் செய்தாயோ
ஊர் சுற்றிதிரிந்திடும் நான்

உன்னையே சுற்றுவதும் ஏனோ


என்ன மாயம் செய்தாயோ
என் அன்பே
குறைகள் இருந்தாலும்
நிறைவாய் உன்னை
விரும்புகின்றேன் நான்



என்ன மாயம் செய்தாயோ
விழிகள் அழுதாலும்
இருதயம் மகிழ்ந்தாலும்
தேடுவது உன்னையே!!!

என்ன மாயம் செய்தாயோ
மனைவியாய் வந்தாய்
மோகத்தையும் தாகத்தையும்
தந்தாய் அன்பிலே வளர்த்தாய்
என்னையும் உன் குழந்தையாய்!!!!