வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, May 14, 2012

என் தாயின் அன்பு

விளங்க முடியாத ஒன்று 
என் அம்மா 
உன் அன்பினை மட்டுமே 
என்னால் விளங்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
உலகிலுள்ள ஒவ்வொன்றும்
ஒன்றையொன்றை
எதிர்ப்பார்த்தே 
விரும்புகின்றது நேசிக்கின்றது
வருகின்றது போகின்றது
அணைக்கின்றது அரவனைக்கின்றது
கண்டிக்கின்றது தண்டிக்கின்றது
ஆனால்
நீ மாத்திரமே
எதையுமே நோக்காமல்
என்னை சுமந்தாய்
என்னை நேசித்தாய்
என்வாழ்வினை விரும்பினாய்
என்னை காக்கின்றாய்
என்னை கண்டித்தாய்
அணைத்தாய் அரவனைத்தாய்
உம் அன்பினால்
என்னைக் கட்டிப் போட்டாய்
நானுன்னை கோபத்தில் 
வெறுத்தாலும் உந்தன்
அன்பினால் அணைத்தாய்
உன் மரணத் தருவாயிலும்
உன்னைப் பற்றியல்ல‌
என் எதிர்காலம் குறித்து
நினைக்கும் மனம் உனக்கெப்படி
வந்தது தாயே......................

காதல் அந்தாதி

காதல் காதல்
என் வாழ்வினை
உணரச் செய்தது காதல்
என் துயரினை
இலகுவாக்கியது காதல்
என் இன்பத்தினை
பெருகச் செய்தது காதல்
என் அழுகையினையும்
ரசிக்கச் செய்தது காதல்
என் தனிமையையும்
விரும்பச் செய்தது காதல்
என் சுவாஷத்தையும்
உணரச் செய்தது காதல்
என் நிழலையும்
கவிதை வடித்தது காதல்
நான் நானாக‌
பேச செய்தது காதல்
என் கோபத்திலும்
சிரிக்க‌ வைத்தது காதல்
என் எழுத்தையும்
அழகாக்கியது காதல்
மரணத்தையும்
வெறுக்க‌ செய்தது காதல்
காதல் காதல் காதல்
காதல் போயின் வாழ்தலில்
இல்லை காதல்

காதலி என்னை காதலி

காதலி தினமும்
என்னை காதலி
காதலி என்னை
மட்டும் காதலி
காதலி எப்போதும்
என்னை காதலி
காதலி எந்நேரமும்
என்னை காதலி
காதலி வாழ்வதற்கு
என்னை காதலி
காதலி உலகை ஜெயிக்க‌
என்னை காதலி
இன்பத்தை அனுபவிக்க‌
என்னை காதலி
துன்பத்தை மறக்க‌
என்னை காதலி
காதலினை காதலிக்க‌
என்னை காதலி
அன்பினை ருசிக்க‌ 
என்னை காதலி
தனிமையில் நினைவினில்
மகிழ்வதற்கு
என்னை காதலி
மரணத்தையும் எதிர்க்க‌
என்னை காதலி
வாழ்க்கை முழுவதும்
என்னோடு வாழ்ந்திட‌
என்னைக் காதலி