வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, October 3, 2012

என்னுள் நீ


என்னிதயத் துடிப்பினில்
மெல்லிசையாய்
என் வாழ்வினில்
அர்த்தமாய்
என் புன்னகையில்
இன்பமாய்
என் துயரத்தில்
விழிநீராய்
என் காயங்களில்
வலியாய்
என்னுடல் அசைவினில்
நிழலாய்
என் செயல்களில்
நினைவாய்
என் உறக்கத்தில்
முடியா கனவுகளாய்
என் விழிகளில்
பிம்பமாய்
என்னுள் நீயாய்
என் உயிரோடு
என் உணர்வோடு
கலந்தவளாய் 
என்றும் இருக்கின்றாய் அன்பே

உன் நினைவுகள் என்னுள்


உன் சிந்தைகளில்
என் நினைவுகள்
வந்ததோ இல்லையோ
என் சிந்தைகளில்
உன் நினைவுகளே
என் செயலாய்
வருகின்றது பெண்ணே.....
நிழல் கூட‌ என்னுடன்
முழுவதும் வருவதில்லை
ஆனால் உந்தன் நினைவுகள்
என்னுடன் எங்கும் எப்போதும்
உன் நினைவுகள் 
உன் பிரிவினை நினைக்கத்
தூண்டுவதாய் இருந்தாலும் ‍ அவை
வலியினைத் தந்தாலும்
அவற்றை நினைக்க‌ 
என் மனம் என்றும் 
மறந்ததில்லை........