வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, October 29, 2016

தீபாவளி ...... தீபாவளி

** தீபாவளி **
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு!!!

மகிழ்ச்சியாக கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு
பிறர்க்கும் மகிழ்ச்சி
தரும்படி கொண்டாடு!!!
Image may contain: text
புத்தாடை உடுத்திடு
புதியதாய் ஜொலித்திடு
பழையன கழிந்து
புதிய எண்ணங்களையுடுத்தி
கொண்டாடு கொண்டாடு!!!!
இனிப்புகளை வழங்கி
கொண்டாடு கொண்டாடு
இருக்கின்றவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கு இனிப்பை
வழங்கி கொண்டாடு!!!!
உன் கொண்டாட்டத்தில்
இல்லாதவரும்
முடியாதவரும் மகிழ்ந்தால்
அதுவே உனக்கு
புண்ணியஞ் சேர்த்திடும்
தீபாவளி..........
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
பட்டாசு வெடித்து
கொண்டாடு பாதுகாப்புடன்
கொண்டாடு கொண்டாடு
பட்டாசின் ஒளியில்
குடும்பம் மட்டுமல்ல
அயல்வீட்டாரின் முகங்களும்
பிரகாசமாகும் படிக்கு
அன்புடன் கொண்டாடு
தீபாவளி கொண்டாடு!!!!!
கொண்டாட வீட்டில்
யாருமில்லையென
ஏங்காதே ஏங்காதே
தனிமையிலும்
கொண்டாடிடலாம்
தீபாவளியினை
ஆதரவற்றோருடனும்
முதியோருடனும்
சேர்ந்து கொண்டாடி
மகிழ்ந்து அவர்களையும்
மகிழ்வித்திடலாம்!!!!!

காக்கைக்கு சோறு
வைப்பதை விட
தெருவில் கையேந்தும்
கரங்களுக்கு ஒருவேளை
உணவளித்து பார்
அவரின் வாழ்த்தே
உன்வாழ்வில் தீபமாய்
ஒளிந்திடுமே!!!!
முடிந்தால்
குடும்பத்துடன்
தீபாவளியினை
ஆதரவற்றோர் இல்லத்தில்
உணவுடன் செலவிடு
கொண்டாடு தீபாவளியை
மழலைகளின் சிரிப்பினில்
மறைந்திடுமே உன்
கவலை களெல்லாம்.......
கொண்டாடு கொண்டாடு
தீபாவளி கொண்டாடு
மகிழ்வோடு கொண்டாடு
பிறரையும் மகிழ்விக்கும்படி
கொண்டாடு!!!!
வெடித்து சிதறிடும்
தீப்பொறிகளைப் போல்
வாழ்விலும் சிதறட்டும்
வண்ணவண்ணங்களாய்
மகிழ்வும் நட்பும்
அன்பும் பாசமும்
வளமும் நலமும்

Wednesday, October 19, 2016

ரசிப்பதற்காக : பாடல்

ரசித்திட ஒரு அருமையான பாடல்
படம் : அகத்தியர்

பாட்டு வரிகள் :

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை....... அன்னை தந்தையே அன்பின் எல்லை தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் மன்னுயிர்  காப்பவர் மாந்தருள் தெய்வம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு....... பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.


பாட்டு ஆடியோவில் :https://www.youtube.com/watch?v=CJRMlk0fz1E

Thursday, October 13, 2016

காதல் இல்லாத வாழ்வு..........

காதலில்
ஏக்கங்கள் இருக்கலாம்
மிரட்டல்கள் கூடாது!
காதலில்
அன்பு இருக்கலாம்
ஆளுமை கூடாது!!
காதலில்
பண்பு இருக்கலாம்
பிடிவாதம் கூடாது!!!
காதலில்
இச்சைகள் இருக்கலாம்
இம்சைகள் கூடாது!!
காதலில்
பிரிதல் இருக்கலாம்
புரியாமல் கூடாது!!!
காதலில்
போராட்டம் இருக்கலாம்
பேயாட்டம் கூடாது!!!!
காதலில்
தீயவற்றை விடலாம்
மனிதத்தை இழந்திட கூடாது!!!
              No automatic alt text available.
காதல்
மனிதனை
மாற்றும்
ஓர் அற்புதம்
அது
நல்ல வழியினில்
மட்டுமே!!!!
காதல் காதல்
காதல்
காதல் இல்லாத
வாழ்வும் ஒரு வாழ்வா!!!

Saturday, October 8, 2016

அன்பு அன்பு அன்பு அன்பு

அன்பு அன்பு
மனிதரின் சிறந்த
பண்பே அன்பு!!!
சிறந்த அன்பு
நேசிப்பவரின் குறைகளையும்
தாங்கி கொள்ளும்!!!
சிறந்த அன்பு
நேசிப்பவரின் குற்றத்தையும்
ஏற்றுக் கொள்ளும்!!!
சிறந்த அன்பு
தனிமையிலும் நேசிப்பவரை
நினைவில் கொள்ளும்!!!!
சிறந்த அன்பு
நேசிப்பவரையும் வாழ்வில்
உயர்த்த எண்ணிடும்!!!!


சிறந்த அன்பு
என்றும் பொறாமை
கொள்ளாது!!!
சிறந்த அன்பு
என்றும் சுயநலம்
சிந்திக்காது!!!
சிறந்த அன்பு
புறங்கூறாது
பொய் சொல்லாது!!!
சிறந்த அன்பு
நிஜத்தில் மட்டுமல்ல
நிழலிலும் நேசிக்கும்!!!!

என் காதல்

தனிமையில்
உற்ற துணையாய்
அழுகையில்
உற்ற ஆறுதலாய்
குழப்பத்தில்
நல்லதொரு தெளிவாய்
என்றும் என்னுள்
என் காதல்!!!!





காதல் கவிதை

என் காதலை
உன்னிடம் சொல்லாமல்
காகிதத்தில் எழுதினேன்
கிறுக்கல் என்றார்
எந்தை!!

கவிதை என்றான்
நண்பன்
எப்படிடா என்றாய்
நீ
கிறுக்கல் கவிதை
என்பதையெல்லாம் விட
"எப்படிடா " என்ற ஒரே
வார்த்தை தான்
என்னுள் இன்னும்
ஒலிக்கின்றது.........




நின் பெயரை
எழுதிடவே
என்னை விட
என் எழுதுகோலும்
நின் பெயரை
தாங்கிடவே
காகிதமும்
தவம் புரிகின்றது!!!!

காகிதத்தில்
பக்க பக்கமாய்
எழுதுவதை விட
ஒரே வார்த்தையில்
எழுதிடும்
உன் பெயரே
அழகாய் தோன்றுகின்றது!!

காதலில் மட்டும்

வாங்குபவர் இல்லாமல்
விற்க முடிவதில்லை
எதையும்!!!!

சேருமிடம் தெரியாமல்
அனுப்ப முடிவதில்லை
எதையும்!!

ஆனால் காதலில்
மட்டும்
ஏற்குமா
நிராகரிக்குமா எனவெதுவும்
தெரியாது
இடம் மாறுகின்றது
என்னிதயம் அவளிடம்

முடியும்.... முயன்றால் முடியும்

** முயன்றால் முடியும் **
முடியும் முடியும்
முயன்றால் முடியும்
முடியும் என்பது
தன்னம்பிக்கை
முடியுமா என்பது
அவநம்பிக்கை
முடியாது என்பது
மூட நம்பிக்கை!!
முடிந்தால் வெற்றி
முடியாவிட்டால்
வெற்றிக்கான பயிற்சி!!
நம்பிக்கையுடன்
முதலடி எடுத்து வை
அதுவே காரியத்தில்
பாதி வெற்றி!!!!
ஒன்பது முறை
விழுந்தாலும்
விழுந்து விட்டோம்
என்று எண்ணாதே
எட்டு முறை
எழுந்தவன் என்று
தோளை தட்டிவிடு!!!
முடியும் முடியும்
முயன்றால் முடியும்!!!!
பலனை எதிர்பாராதே
முயற்சியினை கைவிடாதே
லட்சியத்தில் பசித்திரு
லட்சியத்திற்காய் தனித்திரு
லட்சியத்திற்காய் விழித்திரு
லட்சியத்தினையே பார்வையாக்கி
கனவுகளை வளர் உன்னில்!!!
சிறு உளி தான்
பெருமலையையும் சிதைத்திடும்
சிறு தீக்குச்சி தான்
பெருங்காட்டையும் அழித்திடும்
உன் முயற்சியே
பெருவெற்றியினை தந்திடும்
முயலும் வெல்லும்
ஒரு நாள்
ஆமையும் வெல்லும்
ஒரு நாள்
முயலாமை என்றும்
வெல்லாது!!!!
குழந்தைப் பருவத்தில்
விழுந்தவுடன்
முயற்சியினை விட்டிருந்தால்
இன்றைக்கு நடந்திருக்க முடியாது!!!
முயற்சி செய்
முயற்சி செய்
மீண்டும் முயற்சி செய்
வெற்றி பெறும் வரையிலும்!!!!

ஒரு தலைக் காதல்

** ஒரு தலைக் காதல் **

வலி மிகுந்த
காதல் என்றும்
ஒரு தலைக் காதலே!!
என்றென்றும்
நினைவில் நின்றிடும்
காதல்
ஒரு தலைக் காதலே!!!!

திருமணமானாலும்
மாறாத வாடாத
காதல்
ஒரு தலைக் காதலே!!!!

காதலே என்றென்றும்.............

இளமையில் காதல்
கவிதைகளை பிறப்பிக்கும்
முதுமையில் காதல்
இளமையை பிறப்பிக்கும்
காதல் காதல்
காதலே என்றென்றும்.............



என் காதல் ...........

            



என் காதல்
நேற்றைய காதல் அல்ல
இன்று உதித்திட்ட
ஆதவனை போல்
இன்று மலர்ந்திட்ட
மலரினை போல்
புதியதாய்
புத்தம் புதியதாய்
இன்று மலர்ந்ததடி
உன்மீதான
என் காதலும்
என்றென்றும் பசுமையாய்

என்றென்றும் புதுமையாய்
என்றென்றும் புதியதாய்
என்றென்றும் முதன்மையாய்
என் காதல்
என்றென்றும் உன்னுடன்!!!!!!!!!

காதல் ..... காதல்

காதலில்
ஏக்கங்கள் இருக்கலாம்
மிரட்டல்கள் கூடாது!
காதலில்
அன்பு இருக்கலாம்
ஆளுமை கூடாது!!
காதலில்
பண்பு இருக்கலாம்
பிடிவாதம் கூடாது!!!
காதலில்
இச்சைகள் இருக்கலாம்
இம்சைகள் கூடாது!!
காதலில்
பிரிதல் இருக்கலாம்
புரியாமல் கூடாது!!!
காதலில்
போராட்டம் இருக்கலாம்
பேயாட்டம் கூடாது!!!!

காதலில்
தீயவற்றை விடலாம்
மனிதத்தை இழந்திட கூடாது!!!

காதல்
மனிதனை
மாற்றும்
ஓர் அற்புதம்
அது
நல்ல வழியினில்
மட்டுமே!!!!

காதல் காதல்
காதல்
காதல் இல்லாத
வாழ்வும் ஒரு வாழ்வா!!!

Saturday, October 1, 2016

முயற்சிக்கு முடிவேது


 ** முயற்சிக்கு முடிவேது **



தாயின் கருவில்
துளியாய்
விழுந்தது முதல்
ஆரம்பித்தது
உயிரின் முயற்சி!!!!

முயற்சிக்கு
எல்லையேது
முயற்சிக்கு
முடிவேது

               



முயற்சிக்கும் உயிரே
இவ்வுலகில் வாழவும்
தகுதி யாகின்றது!!

முயற்சித்தால் முன்னேற்றம்
இல்லையேல் வளர்ச்சியேது????

                             


முயற்சிக்காமல்
ஓரிடத்திலேயே தேங்கும்
கழிவு சாக்காடையாக அல்லாது
முயற்சித்து முயறித்து
நதியாக ஓடி
எல்லைகளை விரிவாக்குவோம்!!!!


                            


முயற்சிக்கு முடிவேது
துடிக்கின்ற இருதயம்
நிற்கும் வரையிலும்
முயற்சிக்கு முடிவில்லை!!!