>>>>>>>>>>எங்கே எனது கவிதை
சரணத்தில் கலந்து
ராகத்தில் மெருகேறிய
என்னிசை இன்று
என்னை மட்டும்
ஒலியில்லா இசையாய்
மாற்றி சென்றதேனோ!
ராகத்தில் மெருகேறிய
என்னிசை இன்று
என்னை மட்டும்
ஒலியில்லா இசையாய்
மாற்றி சென்றதேனோ!
உணர்வில் மறைந்து
உயிரில் ஒன்றிய
என் காதலும் இன்று
உயிரை மறைத்தே
வேடிக்கை பார்ப்பதேனோ!
உயிரில் ஒன்றிய
என் காதலும் இன்று
உயிரை மறைத்தே
வேடிக்கை பார்ப்பதேனோ!
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும்
ஜனனமாகிய அவளின் காதல்
இப்பொழுது துடிப்பையே
பாரமாக்குகின்றதே!
ஜனனமாகிய அவளின் காதல்
இப்பொழுது துடிப்பையே
பாரமாக்குகின்றதே!
ஆழ்கடலில் மூழ்கி
மகிழ்ந்திட்ட கடலுயிரியாய்
சிறந்தே விளங்கிய எங்காதல்
நீரின்றியே சுடுமணலில்
தத்தளித்து துடிக்கின்றதே!
மகிழ்ந்திட்ட கடலுயிரியாய்
சிறந்தே விளங்கிய எங்காதல்
நீரின்றியே சுடுமணலில்
தத்தளித்து துடிக்கின்றதே!
வார்த்தைகளில் சொல்லிட இயலா
அன்பின் ஊற்றானவள் - இன்றைக்கு
என்னை தண்டித்தே தன்னுள்
தன்னை உருக்குவதுமேனோ!
அன்பின் ஊற்றானவள் - இன்றைக்கு
என்னை தண்டித்தே தன்னுள்
தன்னை உருக்குவதுமேனோ!
என்னிரவு பொழுதுகளும்
வெண்ணிலா இல்லாத வானமாய்
இருளோடு கழிகின்றதே!
வெண்ணிலா இல்லாத வானமாய்
இருளோடு கழிகின்றதே!
சில்லுசில்லாய் இதயக் குடுவை
உடைந்திட்டாலும் -துகள்கள்
ஒவ்வொன்றிலும் உந்தன்
காதல் நினைவுகள் தானடி!
உடைந்திட்டாலும் -துகள்கள்
ஒவ்வொன்றிலும் உந்தன்
காதல் நினைவுகள் தானடி!
நடக்கின்றேன் நடைப் பிணமாய்
நிழலை மறந்திட்ட நிசமாய்
உயிரை உணராத ஜடமாய்
சிறகொடிந்த பறவையாய்
வாழ்கின்றேன் நிமிடங்களையும்
யுகங்களாய் எண்ணியப்படியே!
நிழலை மறந்திட்ட நிசமாய்
உயிரை உணராத ஜடமாய்
சிறகொடிந்த பறவையாய்
வாழ்கின்றேன் நிமிடங்களையும்
யுகங்களாய் எண்ணியப்படியே!
தோல்விகளும் புதியதில்லை
இழப்புகளும் புதியதில்லை
தோல்விகளிலும் தொடர்ந்தட்ட
நம்பிக்கையாய் அவள்காதல்
இன்றைக்கு கானல் நீரானதே!
இழப்புகளும் புதியதில்லை
தோல்விகளிலும் தொடர்ந்தட்ட
நம்பிக்கையாய் அவள்காதல்
இன்றைக்கு கானல் நீரானதே!