வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, August 24, 2017

பேதையாகிய நான்..................



ஆதவனை சுற்றிவரும்
உலகமாய் என்னவனையே
சுற்றினேன் அவனே
என் உலகமென்று!

Image may contain: one or more people and close-up

அவன் குரலையே
என் வேத வாக்காயெண்ணி
மகிழ்வுடன் ஏற்று நடந்தேன்!

அவன் கட்டுப்பாடுகளையே
என் வாழ்வில்
விதிகளாக்கி சிறையாக்கினேன்
மன மகிழ்ச்சியுடன்!

அவனுக்கு பிடித்தவற்றையே
எனக்கு பிடிக்காவிடினும்
விரும்ப கற்றுக்கொண்டேன்
என்னவனுக்காக!!

தூக்கத்தை வெறுத்து
இரவிலும் அவனோடு
பேசுவதையே விரும்பினேன்
பெற்றவர்களுக்கும் தெரியாமல்!


பொய் விரும்பாத நான்
அவனை சந்திக்க வேண்டுமென்று
பொய்களையே தேடினேன்!

நீயெழுதிடும் ஒவ்வொரு
வார்த்தைகளும் எனக்கென்று
நினைத்து மகிழ்ந்தேன்!

எனக்கான வாழ்க்கையை
உனக்கானதாக மாற்றி
உனக்காகவே வாழ்ந்தேன்!

வாழ்க்கையெனும் பந்தயத்தில்
உன்னோடு சேர்ந்து வாழ்ந்திட
கரம் நீட்டியப்பொழுது
"தகுதியில்லை எனக்கு" என்று
சொல்லி கை விட்டாயடா!

உருகிடும் மெழுகாய்
உன்மீதான காதலோடு
உருக்குகின்றேன் என்னையே!

Thursday, August 3, 2017

நீ வருவாயென ..................


**************** நீ வருவாயென.....


என்னைக் காணாது
மவுனமாக கடந்து செல்கின்றாய்
சாலையினில்……….. ஆனால்
என்னுள் ஆயிரமாயிரம்
நினைவு விதைகளை
தூவியே செல்கின்றாய்!

நொடிப்பொழுதினில் விழிகள்
கண்ட உன்னை
பலமணி நேரங்களாக
நினைத்து நினைத்து
அசைப் போடுகின்றதடி
என் மனது!
    
    Image may contain: 1 person
நீயோ ஒன்றும்
பேசவில்லை என்னிடம்………….
உன்னிடம் பேச வேண்டுமென்றே
பல்லாயிரம் முறை பேசுகின்றேன்
கண்ணாடியின் முன் நின்று!

உன்னிடம் பழகியதில்லை என்றும்
உன்னோடு வாழ்கின்றேன் என்னுள்!

தூக்கத்தில் மட்டுமல்ல என்
துக்கத்திலும் உன்னிலே
ஆறுதலடைகின்றேன் நினைவுகளில்!

வீட்டு வாசலில் கோலமிடும்
அழகை காண
அதிகாலை நேரத்திலேயே
உன் வீட்டுக்கருகில் உள்ள
தேனீர் கடையினில்
தவமிருக்கின்றேன் உந்தன் பக்தனாய்!

உன் விழிகளில்
நான் விழுந்திட வேண்டுமென்றே
உந்தன் நிழலாய் தொடருகின்றேன்!
பின்னால் வருகின்றேன்
உன்னைத் தொடர்ந்து
தொட்டுவிட அல்ல!
என்றாவது என் வாழ்வில்
என்னை தொடர்ந்து
நீ வருவாயென!