வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, April 30, 2012

வரங்கொடு இறைவா..............






என் இறைவா
நீ படைத்த உலகில்
எல்லாமே அன்பாக உள்ளது
காக்கை குருவியும்
அன்பாக உள்ளது
ஒற்றுமையாக உள்ளது
ஆனால்
நீ உந்தன் சாயலில்
படைத்த‌ மனிதரில் மட்டும்
அன்பு இல்லையே ஏன்????
ஈரைந்து மாதங்கள்
சுமந்து பெற்றெடுத்த‌
அன்னையை
அவள் முதிர்வயதில்
அவளைக் காப்பாற்ற‌
மனைவியிடம் அன்பு இல்லை

சகோதர சகோதரிகளின் அன்பு
திருமணத்திற்கு பின் இல்லை
நண்பர்களின் அன்பு
துயரத்திற்கு பின் இல்லை
பக்கத்துவீட்டு அன்பு
சண்டைக்கு பின் இல்லை..........
மனைவியின் அன்பு
சிறு ஊடலுக்கு பின் இல்லை 
சின்னச்சின்ன
மனக் கசப்புக்கெல்லாம்
அன்பு மாயமாகி விடுகின்றது......
சின்னசின்ன ஊடலுக்கெல்லாம்
உறவுகளின் பிரிவுகள்.....
இறைவா......
இன்றைய‌ நாட்களில்
பெற்றவரை முதிர்வயதில்
உணவு தந்து ஆதரவளித்திட‌
பெற்ற மகன்கள்
நாட் கணக்கு பார்க்கின்றனர்.........
என்னதோர் கொடுமை
கூடப் பிறந்த‌
சகோதரி முதிர்கன்னியாயிருந்தாலும்
அவள் அரசாங்க சம்பளம்
எதிர்ப்பார்த்து அவள்
திருமணத்தை தள்ளிப்போடும்
சகோதர அன்பு.........
கள்ளக் காதலனுக்காய்
பெற்ற குழந்தையையே
கொல்லத் துணியும்
தாய் அன்பு.......
கூட வாழவந்தவளை
வரதட்சனை பெயரில்
அடுப்புக் கரியாக்கும்
கணவன்மார்கள்.........
பணம் கொடுக்கும்
மிஷினாய் கணவனை
நினைத்து... ஏசும்
மனைவிமார்கள்...........
பெற்றவள் கீழே
விழுந்தாலும் சிறிதும்
பாசமில்லாத பெற்ற‌
குழந்தைகள்...........
தகப்பனின் சொத்தை
பிரிப்பதில் தகராறு
சொந்த சகோதரனையே
கொல்லும் சகோதரன்.......
தன் சொந்த இனம்
அழிக்கப்பட்ட போதும்
கவலை கூட படாமல்
வெற்று அரட்டையில்
அதே இனத்தின் அன்பு.......
கண்களில் தெரியும்
மனிதனை வெறுத்து
காணாத இறைவனை
நேசிக்கும் ஒரு கூட்டம்........
பிள்ளைகள் மீது
காட்ட வேண்டிய‌ 
அன்பு இன்றைக்கு
வீட்டு வளர்ப்பு பிராணிகளிடம்
காட்டும் மனிதர் ஒருபுறம்.....
எங்கு செல்லுதையா
இவ்வுலகம்......
இறைவா மனிதர்க்கு
உலகில் பொழியும்
மழையைப் போல்
எல்லா மனிதர் மீதும்
அன்பினை பொழிந்திடு
பிறர் துன்பங் கண்டு
உள்ளம் துடித்திடும் அன்பு கொடுத்திடு.......
தன் குடும்பத்தை மட்டுமல்ல‌
தன் இனத்தையும்
தன் நாட்டையும்
தன் உலகையும்
தன்னைப் போல்
உலகிலுள்ள எல்லா மனிதரையும்
நேசிக்கும் வரங்கொடு இறைவா.........
வரங் கொடு.......

Tuesday, April 3, 2012

நின் விழி ஈர்ப்பு விசை



என் மலரே
உன்னைப் பார்த்த‌ பின்பு
நான்
புவி ஈர்ப்பு விசையை
நான் நம்புவதில்லை
எனில்
என்னை இழுப்பதெல்லாம்
நின் விழி ஈர்ப்பு விசை தானடி.......
என்னுடலை மட்டுமல்ல‌
என் உள்ளத்தையும் 
ஈர்க்கும் திறமை
நின் விழிகளுக்கு மட்டுமே....
என்ன‌ மாயம் செய்தாய்
என்னிதயம் துடிப்பது
நின் விழிகளை பார்த்தே
துடிக்கின்றது.....
என் நிழலும்
நின் விழிகளின் பார்வையில்
மயங்குகின்றது..........

Monday, April 2, 2012

காதல் :: நட்பு


உயிர் போகும் நிமிடத்தில்
உன் முகம் பார்த்து
போக வேண்டுமென்று
நினைக்கும் உறவு

" காதல் "

உயிர் போகும் நிமிடத்தில்
உதிரம் கொடுத்து
உயிரை காக்கவேண்டுமென்று
துடிக்கும் உறவு

" நட்பு"

காதலில் தோற்கும் போது
வாழ்வினை எணணாது
மரணத்தை நினைக்கத்
தூண்டும் உறவு

" காதல்"

காதலில் தோற்கும் போதும்
தோல்வியை பங்கிட்டு
அதனை மறக்கச்
செய்யும் உறவு

" நட்பு"

ஆண்கள் : பெண்கள்

தங்களை
நினைக்க மறந்து
தாங்களை
நினைக்க மறந்தவர்களையும்
வெறுக்க நினைப்பவர்களையும்
மறவாமல் நினைப்பவர்கள்

ஆண்கள்




தங்களை தானே
நினைக்க மறந்து
அவர்களை நினைப்பவர்களையும்
மறக்க நினைத்து
வெறுக்க நினைப்பவர்கள்

பெண்கள்


ஒருத்தரை விரும்பினால்
ஆயிரம் காரணம்
சொல்வர் ஆண்கள்
ஒருத்தரை வெறுத்தால்
ஆயிரம் காரணம்
சொல்வர் பெண்கள்

காதலிக்கும் போது.....
அழகாய் தெரிவர்
ஆண்கள்
தேவதையாய் தெரிவர்
பெண்கள்
காதலில் தோற்றுவிட்டால்
அழகாய் தெரிவர்
பெண்கள்
பைத்தியமாய் மாறுவர்
ஆண்கள்



சிரிக்க‌ கொஞ்சம் நகைச்சுவை


ஆசிரியர் : நரகாசுவரனைக் கொன்றது யார்?
மாணவன் : அதைக் போலீஸ் பார்த்துப்பாஙக சார், நமக்கேன் வம்பு...
==========================
அப்பா : ஏன்டா, இன்னைக்கு உங்க ஸ்கூல்ல நடந்த ஓட்டப் பந்தயத்தில கலந்துகிட்டல, பரிசு கிடைத்ததா?
மகன் : போங்கப்பா, பயந்தாங்கொள்ளிப் பசங்க, எல்லாரும் எனக்குப் பயந்துட்டு, முன்னாடி ஓடிட்டாங்கப்பா....
===============================
திருமணத்திற்கு வந்த நண்பர்கள் இருவர்....
நண்பர் 1 :‍ டேய் மச்சி, கல்யாணத்திற்கு பொண்ணுக்கு ஏன் மேக்கப் போடுறாங்கன்னு தெரியுமா?
நண்பர் 2 : தெரியலையே மச்சி?
நண்பர் 1 : கிப்ட் எப்படி இருந்தாலும், பேக்கிங் நல்லா இருக்கனும்ல அதான்.....நீ வைக்கிற 51 மொய்க்கு அழகா ஒய்ட் கவர்ல வைக்கிறல அது மாதிரி தான்.....

நான் ரசித்தவை.......


லவ் லெட்டர்
மனசுக்குள்ள நிறைய இருக்கும் ஆனா எழுத வராது ..... அது லவ் லெட்டர்
மனசுக்குள்ள ஒன்னுமே இருக்காது, ஆனால் பக்கபக்கமா
எழுதுவோம் அது " செமஸ்டர்"
=================================
ஆட்டோவில் ரசித்தவை :
காதலி தோற்றால் கவலைப்படாதே.....
நீயாக மாட்டிக் கொண்ட
ஆயுள் சிறையிலிருந்து இறைவன் உனக்கு
ஜாமின் வழங்கிவிட்டார் என்று அர்த்தம்........ 
=========================================



நின் கருவிழிகள்.....



என்னவளே,
என் விழிகள்
நின் கருவிழிகளில்
தேடியது எல்லாம்
அன்பு மட்டுமே......
எப்படி உன்னால்
உனது கருவிழிகளில்
ஒருபுறம் கொஞ்சு மொழியும்
மறுபுறம் நஞ்சு விதைகளையும்
வைக்க முடிந்தது........
நின் கருவிழிகளில்
காதலை பார்வையாய்
பொழிந்தாய் பின் எப்படி
உன்னால் பிரிவினையும்
நின் விழிகளால்
தர முடிந்தது............
உன் விழிகளில்
நடனமாடும் கருவிழிகளில்
என்றும் எப்போதும்
என்னுருத் தெரிய வேண்டுமென்று
தானடி உன்னிடம்
வரங் கேட்டேன்.......
ஆனால் நீயோ
வரத்தை
மறந்ததும் அல்லாமல்
அவ்விழிகளை நானும்
காணக் கூடாதபடி
சாபம் அல்லவா
தருகின்றாய்.......
என் துணையே
இன்றே யோசித்து
முடிவெடு.....
அன்பினால் நாம்
வாழும் வாழ்வில்
இன்பத்தின் நாட்களின்
ஆயுள் குறைந்துக் கொண்டே
செல்கின்றது......
பிரிவின் நாட்களைக்
கூட்டிக் கொண்டே.......
நான் இறக்கும் போது கூட‌
உன் கருவிழிகளில்
என்னுருத் தெரிய
வேண்டும் செல்லமே