வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, May 4, 2018

விலகிச் செல்லாதே!




கரையை விட்டு
நீங்கிச் செல்வதில்லை
கடலலைகள் என்றுமே!
காற்றை விட்டு
பிரிந்துச் செல்வதில்லை
தென்றல் என்றுமே!
மேகத்தை விட்டு
தனித்து இருப்பதில்லை
நிலவு என்றுமே!
நிஜத்தை விட்டு
பிரிந்துச் செல்வதில்லை
நிழல் என்றுமே!
எரித்துக் கொண்டேயிருந்தாலும்
விலகி நிற்பதில்லை
சூரியனை விட்டு பூமி என்றுமே!
என்றுமே பிரிந்திடாத
விலகிடாத உறவாய்
நீ வேண்டுமென்றே
விரும்பினேன் கனவிலும் நனவிலும்!

எப்படி பெண்ணே
என்னை விட்டு
பிரிய எண்ணினாய்!
விலகிச் செல்லாதே பெண்ணே
விலகிச் செல்ல எண்ணினால்
வலியில்லாது உடலை விட்டு
உயிரை எடுப்பது போன்று
விலகி சென்றிடு என்னவளே!

போ ............ போகாதே

தள்ளிச் செல்
என்று சொல்லியும்
தேடிப் பார்க்கின்றேன்
விழி காணா தூரத்திற்கு
சென்றுவிடுவானோ என்ற
பயத்தினில்!
வராதே
என்று சொல்லியும்
வந்து பார்க்கின்றேன்
எங்கு வராமல்
போய் விடுவானோ என்ற
தயக்கத்தில்!
இதய கதவினை
மூடியே வைக்கின்றேன்
அவனை உள்
வரக் கூடாதென்று அல்ல!
கதவின் பின்னால்
அவனின் தத்தளிப்பை
ரசிக்க வேண்டுமென்றே!