வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 23, 2010

என் காதல்

என் இனியவளே,

நீ சைக்கிளில்
செல்லும் போது
நானுன்னை முந்தி செல்வது
நீ என்னை
காண் வேண்டுமென்றல்ல‌
"அந்த ஒரு நொடியில்"
நம் நிழல்கள் ஒன்றாக
இணைய வேண்டுமென்று தான்........

நின் பெயரை
எழுதினேன்
கவிதை என்றனர் நண்பர்கள்
நின் பெயரை
எழுதி எழுதி
என் கையெழுத்தும் அழகானது

நான் நண்பர்களுடன்
கூட்டமாக பேசினாலும்
நீ கடந்து செல்லும் போது
என் மனம்
என்னையும் மீறி
உன்னிடம் பேசுகின்றது
உனக்கும் தெரியாமல்.......

உன்னிடம்
ஒரு முறை
என் காதலைச் சொல்ல
பல முறை வீட்டுக்
கண்ணாடி முன்
சொல்லி சொல்லி
என் வீட்டு நிலைக் கண்ணாடியும்
வெட்கப்படக் கற்றுக் கொண்டது.........

நான் கொண்ட
காதலை
மழையாய் பொழிய‌
காத்திருந்தேன்
நாட்களாய் அல்ல‌
மாதங்களாய் அல்ல‌
வருடக் கணக்கில்........

உனக்காக எல்லாம்
செய்வேன் உனக்காக‌
கடைசியில் என்
ஒரு தலைக் காதலை
மறைத்துக் கொன்றதும்
உனக்காகத் தான்
எனில்
உன் காதல்
வாழ வேண்டுமென்று தான்
.......

அவள் விழிகள்

என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌

அன்னையின் அன்பு..........

பள்ளித் தோழரின் அன்பு
முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை.......

கல்லூரி நட்பின் அன்பு
மூன்றாண்டு முடியும் வரை.......

பெண் தோழியின் அன்பு
அவள் தகப்பன் சொல்லும் வரை.........

நேசித்த காதலியின் அன்பு
அவள் திருமணம் முடியும் வரை.......

பயணத் தோழரின் அன்பு
பயணம் முடியும் வரை........

சகோதர கோதரியின் அன்பு
திருமணம் முடியும் வரை.......

வியாபார பார்ட்னரின் அன்பு
இலாபம் வரும் வரை..........

ஆனால்

பெற்ற அன்னையின் அன்பு
அவள் நினைவிருக்கும் வரை..........

Saturday, February 20, 2010

காதலின் தாகம்

என் தென்றலே,

ரோஸ் கலர் சேலைக் கட்டி
அக்னி நட்சத்திரத்திலும்
மனதில் தென்றலாய்
ஐஸ் வைத்தவளே........

சிகப்பு கலர் நைட்டியுடுத்தி
என்னுள் தோன்றிய
கேடான காமத்திற்கு
ஆப்பு வைத்தவளே.........

எனக்குள்
மின்மினியாய் வந்தாய்
என்னை
எரிமலையாய் மாற்றி விட்டாய்.....

எனக்குள்
தென்றலாய் வந்தாய்
என்னை
புயலாய் மாற்றி விட்டாய்.....

இது தான்
காதலின் தாகமோ

Friday, February 19, 2010

என் காதலி


என்னவளை
மலருக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் மலர்
மாலையில் வாடி விடும்

என்னவளை
நிலவுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் நிலவு
அமாவாசையில் தேய்ந்து விடும்

என்னவளை
விண்ணுக்கு ஒப்பிட மாட்டேன்
எனில் விண்
மேகத்தில் மறைந்து விடும்

ஆம் எனில்
என்னவளின் அழகை
ஒப்பிடும் அளவிற்கு
இறைவன் இன்னும்
அழகுப் பொருளை
படைக்க வில்லை

என் நண்பன்::::::::::



என்னிடம் பிடித்த‌தை
பிறரிடம் சொல்
நானி ல்லாத போது!!!
என்னிடம் பிடிக்காத்தை
என்னிடம் சொல்
யாரு மில்லாத போது!!!

நான் தவறு செய்தால்
உன் கரங்களுக்குத் தான் முதலில்
அடிக்கவும் உரிமை யுண்டு
நான் சாதித்தால்
உன் கரங்களுக்கு தான் முதலில்
அணைக்கவும் உரிமை யுண்டு

எனில்
நீ எந்தன்
நண்பன்

நான் .........

என்னவளே,
நீ தலை தாழ்ந்த போது
உன்னை நோக்கி என்
தலை உயருகின்றது
நீ என்னை
நோக்கும் போதோ
என் பார்வை
தடுமாறுகின்றது.....

உன்னை
பின்பற்றி வருகின்றேன்
நீ பின்னோக்கும் போதோ
என் கால்கள்
தடம் மாறுகின்றது.........
உன்னை முந்திச் செல்ல‌
என் மனம் மறுக்கின்றது..........

உன்னிடம்
பேசும் படி
என்னுள்ளும்
என் வீட்டு
நிலைக் கண்ணாடி முன்பும்
பேசியவை அதிகமதிகம் ......

உன்னிடம்
இதுவரை
பேசிய துமில்லை
பழகியது மில்லை
ஆனால்
நான் உன்னுடன் தான்
வாழ்கின்றேன்
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன்

நீ என்னருகில்
இல்லா விட்டாலும்
நீ வெளியிடும்
காற்றைத் தான் நான்
சுவாஷிக்கின்றேன்

நான்
உன்
உன்னையே நினைக்கும்
உனக்காகவே வாழும்
உன்னையே சுவாஷிக்கும்
"ஒரு தலைக் காதலன்"

என் காதல்::::



என் இனியவளே,
நானு ன்னைக்
காதலிக் கின்றேன்

நீ என் காதலி
என்று ஊர் சுற்ற அல்ல!

உன்னுடன்
பார்க் சினிமா
என்றுப் போகவும் அல்ல!!

காதலனென்பதை பிறரிய‌
கவிதையென்ற பெயரில்
காகிதங்களை வீணாக்க அல்ல‌

உன்னுடன்
வெளியூர் சென்று
உன்னுடலை தழுவவும் அல்ல!!!

காதலர்கள் என்ற பெயரில்
பொது இடங்களில்
உன்னுடலை உரசிடவும் அல்ல!!!!

நானு ன்னைக்
காதலிக் கின்றேன்
நம் திருமணம் வரை
மட்டுமல்ல‌

என்னிதயம் ஒய்வெடுக்கும் வரை
காதல் புவியில் வாழும் வரை
அழியாக் காதல் வாழ வளர‌

நானுன்னை நேற்றும்
காதலித்தேன்
நானுன்னை இன்றும்
காதலிப்பேன்
நானுன்னை என்றும்
காதலித்துக் கொண்டே யிருப்பேன்
என்றென்றும்

Thursday, February 18, 2010

காதல்

நம் இதயம்
அன்பு நட்பு
பாசம் நேசம்
கோபம் பரிவு
வெறுப்பு
காமம்
என அணைத்தையுமே
ஏற்கும் ஆனானால்
காதல் மட்டுமே
இதயத்தை ஏற்கும்......

அவள் விழிகள்

என்னவளே,

நின் பரதமாடும் விழிகள் கண்டு
என் வழி மறந்தேன்......

ஊசலாடும் கரு விழி கண்டு
ரசிகன் ஆனேன்........

நின் வில் புருவம் கண்டு
காதலன் ஆனேன்......

நின் இமைகள் கண்டு
(என்னிமை துடிப்பதை நிறுத்தி)
உன்னையே காணும் சிலையானேன்.......

உன் கரங்கள் வழி நடத்த‌
நான் குருடாகவும் தயாரானேன்....

நின் பார்வையில்
என்னுரு மட்டுங் காண‌
உன்னையே காதலித்தேன்.......
உனக்காக எல்லாம் உனக்காக‌