வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, February 8, 2018

என்னுயிர் நீ தானே

             ***** என்னுயிர் நீ தானே

உந்தன் நினைவுகள்
எந்தன் மனதினில்
நினைவுகளோடு மட்டுமல்ல
என்னுடலிலும்
செங்குருதியில் கலந்தே
உலா வருகின்றது
என்னை என்னுள்!

மன்னவனே
என்னிழலிலும் காண்கின்றேன்
எனக்கான உன்னுருவத்தை!
எங்கோ ஒலித்திடும்
மெல்லிசையிலும் என்னை
அழைப்பதாய் உணர்கின்றேன்!
யாரோ என்னை
பேர் சொல்லி அழைத்திட்டப் பொழுதும்
உங்குரலாய் எந்தன் செவிகளில்!
எந்தன் உடல் மட்டுமல்ல
எந்தன் உயிரும் நீதானே
உன் நினைவுகளை
மறந்திடும் நாளே
என்னுயிரும் என்னை
கடந்து சென்றிடுமே!