வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, July 10, 2019

தடையுடை பெண்ணே..........

பெண்ணே பெண்ணே
உன்முன் இருப்பதெல்லாம்
கற்களே…… கற்களை
மேலே உயர்த்துவதும் நீயே
கீழே தாழ்த்துவதும் நீயே!!!
உயிரில்லாத கற்களடா அவைகள்
அவற்றினைக் கண்டு
அஞ்சிடாதே பெண்ணே!!
பெண்ணே நீயும் சக்தியடி
கல் இல்லையடி!!!
தட்டி தட்டி எடு கல்லினை
துணிந்து நின்று உயர்த்திடு
உனக்கு தேவையென்றால்!!
எட்டி எட்டிப் பிடித்து கல்லினை
கீழே வைத்திடு உன்
கரங்களின் கீழே
அஞ்சிடாதே அஞ்சிடாதே பெண்ணே
கற்கள் உயரமாய் போகின்றதென்று
உயர உயர பறந்தாலும்
கல் கழுகாய் ஆகாதடி பெண்ணே!
மீண்டும் உன் கரத்திற்குள்ளேயே
வந்திடுமே பெண்ணே!!


பெண்மையின் தரத்தை
அறிந்திடாத மூடர்களும்
உயிரில்லாத கற்களே!!
பெண்மையின் இதயத்தை
உணர்ந்திடாத இழிவர்களும்
உயிரில்லாத கற்களே!!
பெண்ணே உன்னை
தனிமைப்படுத்திட்டால்
ஜெயித்திடலாம் என்று
பகல்கனவு கண்டிடும்
மூடர்களுக்கு புரிய வைத்திடு பெண்ணே
தனிமையில் அல்ல
இவ்வுலகமே
பெண் எனும் சக்தியில்
தானடா சுழலுகின்றது என்பதை
பெண்ணே நீ சக்தியடி
கற்களை கண்டு அஞ்சிடாது
கற்களை உன் விருப்பத்திற்கு
தட்டி தட்டி எறிந்திடு மேலே
எட்டி எட்டி பிடித்து
கீழ்த் தள்ளிடு பெண்ணே