வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, October 23, 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே
என் ஈர நெஞ்சும் பொறுக்குதில்லையே
கந்துவட்டிக்கு எதிராக
பல சட்டங்களை தீட்டிய
அம்மையாரின் வழி ஆட்சியில் ...
வட்டியாளர்க்கு எதிராக
மாவட்ட ஆட்சியாளரிடம் இரண்டுமுறை
புகார் அளித்தும் கண்டுக்கவில்லையே
நீதி கிடைக்கவில்லையே!
ஆட்சியாளர் காவல் நிலையம்
அனுப்புகின்றார் நீதிக்காய்!
காவல் நிலையத்தில் நிதியில்லையென்பதால்
நீதி கிடைக்கவில்லையே
எழை ஜனங்களுக்கு!




அன்றைக்கு கிடைக்காத நீதிக்காய்
மதுரையை அழித்தாள் கண்ணகி,
இன்றைக்கு தங்களுக்கு நீதியில்லையென்று
குடும்பத்தோடு எரிகின்றார்கள்
மக்களை காக்க வேண்டிய
அரசு அலுவலகத்திலேயே
நெஞ்சு பொறுக்குதில்லையே
வட்டிக்காய வீடுகளையும்
உடைமைகளையும் அடகாய் வாங்கிய
கொடூரர்கள் எல்லாம் இனி
உயிரையும் அடகாய் வாங்குவாரோ
அரசு அதிகாரிகளின் துணையோடு!
                                                   
அரசே மாநில நிர்வாகமே
உங்கள் கண்களில் பார்வை இல்லையா
நீரில் குளித்து மகிழ வேண்டிய
இளம் பிஞ்சுகள் இன்றைக்கு
ஒன்றும் அறியாது
பெற்றோர் பட்ட கடனுக்காய்
அவர்களின் உடலும் எரிந்ததே
கடனுக்கு விலையாக!