வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, June 7, 2017

என்னவள் என்றும் இனியவள்.....

                   Image may contain: one or more people and close-up

ஒற்றை வரியினில்
இலக்கணமில்லாது
அன்போடும் 
காதலோடும்
நான் அழைத்திடும்
கவிதை
அவள் பெயர்!


விழிகளில் உட்வாங்கிய
நாள்முதல்
வருடங்கள் பலகடந்தாலும்
அன்பெனும் உயிரூற்றி
காதலெனும் விருட்சமாய்
என்னுள் இதயமாய்
துடிப்பவளே!

துடிக்கின்ற என்னிதயம்
ஏனடி மறுக்கின்றது
எனக்காய் துடித்திட!
விடைக்கொடு கோபத்திற்கு
நீரில் மிதந்திடும்
பூகோளமாய் உன்னுள்
நான் மிதக்கின்றேன்
நின் நினைவுகளில்
என்றுமே!
வழிகள் இல்லா
வாழ்க்கையில்
என்றும் வலிகளோடு
பயணிக்கின்றேன் நான்!
என் வாழ்வில்
எனக்காக வந்திட்ட
முதல் வெற்றியடி!
நட்புகள்
உறவுகள் பலயிருந்தாலும்
என்னுள் இதயமாய்
உன் நினைவுகளே
என்றும்!
விழிகளில்
காட்சிகள் பலயிருந்தாலும்
விழும் பிம்பமாய்
உன்னுருத் தானடி
என்றும்!
காதலை
சுவாசிப்பவன் நானடி
காதலின் உருவமாய்
நீயிருப்பதால்!
என் வலிகளையெல்லாம்
மறந்தேன்
உந்தன் புன்னகைக் கண்டு!
தோல்விகளையும்
இழப்புகளையும்
கண்டே வளர்ந்திட்ட நான்
ஆறுதலடைவது
உந்தன் அன்பில் தானடி!
மரணம் என்னை
நெருங்கி வந்தப்பொழுதும்
தவிர்த்து சென்றதடி
உன்மீதான
என் காதலினால்!!

Monday, June 5, 2017

காதல் கோட்டை

                     
வெட்கமெனும்
சொல்லின் 
உருவம் கண்டேன்
அவளை பார்த்தப் பின்பு!

அவள் விழிகளை
ரசித்திடுகையில்
என் வழியினை
நினைக்க மறக்கின்றேன்!

அவளின் பேச்சில் அல்ல
மவுனப் புன்னகையில்
அறிகின்றேன் ஆயிமாயிரம்
காதல் கவிதைகள்!

           
                       Image may contain: 2 people


அவளின் வில் புருவத்தில்
புறப்பட்ட பார்வை அம்பு
என்னிதயத்தில்
காதல் கோட்டையாக!!

என்னிலை மறந்து
நேசிக்கின்றேன் அவளை....
தன்னிலை உணர வைத்திடுமோ
அவளின் காதல்!

அவளின் செவ்விதழ்கள்
சொல்லிடத் தான்
துடிக்கின்றன
என் மீதான காதலை
ஆனால் அதனை
அடைத்திடுகின்றதே
பெண்ணின் நாணம்!!

செலவில்லாமல்
நேரங் கழிக்கின்றேன்
அவளை ரசித்துக் கொண்டே
காதலுடன்!