வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, February 27, 2019

அவளொரு அழகிய ராகம்

>>>>> அவளொரு அழகிய ராகம்

பெண்மையின் உருவமவள்!
சாந்தத்தின் உருவகமவள்!
அன்பின் அர்த்தமவள்!
மென்மையின் பிறப்பிடமவள்!
அழகின் அழகவள்!

கோபத்திலும் அன்பு மாறாதவள்
சண்டையிட்டாலும் பிரியாதவள்
விலகியே நின்றாலும் நெருங்கியிருப்பவள்!
எப்போதும் தாய்மையின் குணமுடையவள்!

அவள் விழிகளில் எப்பொழுதும்
அன்பும் பண்பும் நிறைந்தே
புன்னகை பூத்திடுமே!

அவள் செவ்விதழ்கள்
எப்பொழுதும் மென்மையுடன்
இனிமையாய் உண்மையை மட்டுமே
உரைத்திடுமே!

வாடிடாத மலரவள்
தேய்ந்திடாத நிலவு அவள்!
தெள்தேனினும் சுவையவள்!
எத்தனை முறை
வாசித்தாலும் மீண்டும்
வாசிக்க தூண்டிடும்
கவிதையவள்!
நான் மீண்டும் மீண்டும்
மீட்டிட நினைத்தே
என்னை மறக்க நினைத்திடும்
அவளொரு அழகிய ராகமவள்!

Tuesday, February 19, 2019

ஏனிந்த ராகங்களோ

>>>>>>>ஏனிந்த ராகங்களோ

நிசப்த வனத்திலும்
அமைதியாய் துயில் கொண்டேன்
அவளின் நினைவுகளோடு!
ஒப்பனை யில்லாமலே
அழகாய் வலம்வந்தேன்
அவளோடு பயணித்த
நினைவுகளோடு!
ஓசைகள் இல்லாமலே
ராகங்கள் ரசித்தேன்
அவளின் விழியசைவில்!




துயரிலும் கரம்பிடித்தே
நடத்தியவள் இன்று
என் பாதையென்று சொல்லியே
மாற்று வழியினில்
அவள் மட்டும் தனியாய்!

அன்பின் மொழியால்
காதல் பாடம்
கற்றுத் தந்தவள் ஏனோ
ஸ்வரங்கள் இல்லா
முகாரி ராகத்தை
தந்தே கடக்கின்றாள்!

ஏனிந்த ராகங்களோ
மனதின் வலிகளை
மறந்திடவா அல்லது
மீட்டிடவா!

Monday, February 18, 2019

என்னவளின் சுவை

குயிலோசையாய் அழைக்கின்றாள்
என்பெயர் சொல்லியே
என்னை மறந்தே
காத்திருக்கின்றேன் மீண்டும்
என்னை எப்போது அழைப்பாளென!!

விழுங்கிடும் திராட்சையின்
இனிப்பு சுவையும்
தோற்றே போகும் என்னவளின்
குரலிசையில்!!

Sunday, February 17, 2019

என்னைத் தேடி ஓர் வெண்ணிலா ****

**** என்னைத் தேடி ஓர் வெண்ணிலா ****

விழிகள் படபடக்க
விரல்கள் துடிதுடிக்க
காத்திருக்கின்றாள் அவள்
செல்லிடப் பேசியில்
என் அழைப்பிற்காக!

வயிற்றில் பசியிருந்தாலும்
வெளியினில் அமர்ந்திருப்பாள்
பொறுமையுடனும் காதலுடனும்
என் அழைப்பிற்காக!

கோபமென்பதை அறியாதவள்
அன்பின் உருவகமவள்
என்னைத் தேடி
மண்ணில் பூத்திட்ட
வெண்ணிலா அவள்!
  

அருகருகே இல்லாவிடினும்
அவளின் அன்பினால்
என்னை ஆட் கொள்பவள்!