வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, February 17, 2017

மனமே மனமே ??????????



மனமே மனமே
சிரிக்கின்றாய்
சிரித்த வேலையிலேயே
சிந்திக்கின்றாய்
சிந்திக்கும் வேலையிலேயே
பேசுகின்றாய்
பேசுகின்ற வேலையிலேயே
வருந்துகின்றாய்
வருந்தும் வேலையிலேயே
அன்பாகின்றாய்
அன்பான வேலையிலேயே
கோபமாகின்றாய்
.
.
                                   

.
உன்னை என்னுள்
அடக்குவதா
நான் உன்னுள்
அடங்குவதா
என்று புரியாமலே
செல்கின்றேன்
பல நேரங்களில்
குழப்பத்துடனும்!!!
குழப்பத்திற்கான
முடிவு தெரியு முன்பே
மீண்டும் கிளறுகின்றாய்
நினைவுகளை!!!
நடப்பதை யெண்ணி
வருந்திடும் போதே
எதிர்காலத்தை யெண்ணி
சிந்தித்து என்னை
மேலும் குழப்புகின்றாய்!!!
கலங்கிய குட்டையில்
மீன் பிடிக்கலாம்
ஆனால்
குழப்பமான உன்னில்
நான் முடிவெடுப்பது!!!

Tuesday, February 14, 2017

காதலர் தின சிறப்பு கவிதை.....


மொழிகளால் அல்ல
விழிகளால் பேசி
என்னை தடுமாற
செய்கின்றாயடி பெண்ணே!!!!

Image may contain: one or more people and close-up


மகிழ்ச்சியையும்
காட்டுகின்றாய்
சிரிப்பாக விழிகளில்!!

கோபத்தையும்
காட்டுகின்றாய்
அனலாக விழிகளில்!!

ஏக்கத்தையும்
காட்டுகின்றாய்
ஏங்கும் விழிகளாக!!

காதலையும்
காட்டுகின்றாய்
அன்(ம்)பு விழிகளாக!!

காமத்தையும்
காட்டுகின்றாய்
காமனின் தூதுகளாக!!!

ஒட்டுமொத்த
என் காதலையும்
உள் வாங்குகின்றாய்
விழி யெனும்
கடலினில்@

என்னவளின் அழகு

****************** என்னவளின் அழகு
ஓவியனும் வியந்திடும்
ஓவியம் அவள்!
சிற்பியும் வியந்திடும்
சிலை அவள்!




                     Image may contain: 2 people
கவிஞனே வியந்திடும்
கவிதை அவள்!
எழுத்தாளனே வியந்திடும்
தொடர்கதை அவள்!

                  Image may contain: 1 person, selfie


படைத்தவனே தன்னிலை மறந்திட்ட
தேவதை அவள்!
ருசிக்கருசிக்க திகட்டாத
சுவை அவள்!

Thursday, February 9, 2017

சிந்தித்திட அறிஞர்களின் பொன்மொழிகள்

பொன்மொழிகள் ::
***********************
**) அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

**) ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

**) லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

**) அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

**) ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

**) அரிஸ்டாட்டில்.
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

**) மாத்யூஸ்.
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

**) முகம்மது நபி.
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

**) ஸ்டீலி.
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

**) வள்ளலார்.
இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

**) மகாகவி பாரதியார்.
அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.

**) சார்லி சாப்ளின் :
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்த கூடாது.

**) அன்னை தெரேசா :
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

**) கவியரசு கண்ணதாசன் :
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
**) அலெக்சாண்டர் :
உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால், நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.