வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, January 31, 2017

கவிதை எழுதிடவே...........

#ஜோ

கவிதை எழுதிடவே
முயல்கின்றேன் நானும்
சந்திப் பிழைகளும்


மரபு பிழைகளும்
என்முன் நின்று
பயங் காட்டுகின்றதே!!

சீர்களும் வரிகளும்
சீராக இல்லாமலே
சிந்திக்க வைக்கின்றதே!!!!



எழுதிடத் தான்
முயலுகின்றேன்
ஆனால் எழுதிடவே
முடியவில்லை!!!
காதலை
காதலிக்கின்றேன்
நட்பினை
நேசிக்கின்றேன்
ஆனால் ஒரு
காதல் கவிதை
எழுதிடவும் இயலவில்லை
நட்புக் கவிதை
இயற்றிடவும் முடியவில்லை!!!

                     

கிறுக்கினதை
நான் கவிதை என்றேன்
ஆனால் காதல்
என்னை ஏளனம் செய்கின்றது
உன் வரிகளுக்குள்
என்னை அடக்கிவிட்டாயென்று!!
எழுதினதை
நட்பு கவிதையென்றேன்
நட்பு என்னை
கண்டு சினங்கொள்கின்றது
மனுக்குலத்தின்
உரியதுணை என்னை
உன் சொற்களுக்குள்
அடக்கி விட்டதெப்படியென்று!!!

Tuesday, January 24, 2017

சிந்தித்திட

****** கேலி கூடாது ***************
ஒரு காட்டில் மயில் ஒன்று வாழந்து வந்தது. தன் அழகைப் பற்றி மிகுந்த தற்பெருமை கொண்டிருந்தது.
அருகில் இருந்த பெரிய ஏரிக்கரைக்கு நாள்தோறும.; அது செல்லும். தெளிந்த நீரில் தன் உருவத்தை மேலும் கீழும் பார்த்து மகிழும் . ஆ இவ்வளவு அழகாக இருக்கிறேன். என் அழகு வேறு எந்தப் பறவைக்கு உள்ளது ? பல வண்ணங்களை அள்ளி வீசுவதில் வானவில்லை மிஞ்சும் என் தோகையின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே என்று தனக்குள் நினைக்கும்.
மற்றப் பறவைகளைப் பார்த்து விட்டால் போதும் என்ன அழகு உனக்கு இருக்கிறது ? ஆண்டவன் ஏன் உன்னை. இவ்வளவு அவலட.;சணமாய் படைத்து விட்டான் என்ற கேலி செய்யும்.
ஒரு நாள் ஏரிக்கரைக்கு கொக்கு ஒன்று வந்தது,
அதைப் பார்த்து மயில், என்ன உன் இறக்கைகள் பலவித வண்ணங்களில் ஒளி வீசுகின்றன. அவற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. உன்னைப் போன்ற அழகான பறவையை நான் பார்த்தே இல்லை என்ற கேலி செய்தது.
அதற்குக் கொக்கு, மயிலே உன்னைப் போன்ற அழகான இறக்கைகள் எனக்கு இல்லை, இறக்கைகள் அழகாக இருப்பதால் ஏதேனும் பயன் உண்டா ? என் இறக்கைகளைக் கொண்டு நான் எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்வேன். வானத்தில் உச்சியைக் கூட என்னால் பார்க்க முடியும். அதுபோல் உன்னால் முடியுமா ? உன் இறக்கைகள் உன்னைச் சுமந்து சிறிது தூரங்கூட பறக்காதே. நீயா என்னைக் கேலி செய்கிறாய் ? என்று பதில் கேள்வி கேட்டது.
மயிலால் அதற்கு பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. தலை கவிழ்ந்தபடி அங்கிருந்து சென்றது. அன்றிலிருந்து மற்ற பறவைகளை கேலி செய்வதை விட்டு விட்டது.

Friday, January 20, 2017

சிந்தித்திட

ஒரு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் ஒரு பெரியவர் ஏறினார். தலையில் ஒரு மூட்டையை வைத்திருந்தார்.
மூட்டையை சுமந்துகொண்டே உள்ளே வந்தார். மூட்டையை சுமந்துகொண்டே இருக்கையில் அமர்ந்தார்.
ரயில் புறப்பட்டது.
இவர் தன் தலையில் இருந்த மூட்டையை இறக்கி கீழே வைகனும்மல்ல? வைக்கவில்லை.
எதிரில் அமர்ந்திருந்தவர் கேட்டார், ஏங்க மூட்டைய தலை மேலேயே வெச்சிருகீங்க, கீழே இறக்கி வைக்கவேண்டியதுதானே ??
வேண்டாங்க பாவம்; தலையில் இருக்கிற மூட்டைய எறக்கி வெச்சா ரயிலுக்கு பாரம் அதிகமாயிடும், நான் தலைலயே வெச்சிருகிறேன் அப்படின்னு அந்த பெரியவர் சொன்னார்.
இந்த மாதிரி ஆட்கள பாத்தா நமக்கு சிரிப்பு தான் வரும்.
ஏன்னா, ரயில் இப்பவே அந்த மூட்டையையும் சேர்த்துதான் சுமந்துகிட்டு போகுது. அவர் அந்த மூட்டையை தலையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான் தரையில் வெச்சிருந்தாலும் ஒன்னு தான். இதனால ரயிலுக்கு எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.
அதே மாதிரி தான் நம்மோட மனமும், இதுவும் ஒரு தேவை இல்லாத ஒரு சுமை. அனாவசியமா சுமந்த்துகிட்டு இருக்கிறோம். இதையும் கீழே இறக்கி வெச்சிட்டா வாழ்க்கை பிரயாணம் சுகமாக இருக்கும்.
ரயில் பிரயாணம் செய்யும் அந்த பெரியவர் மூட்டையை சுமக்கிறார். வாழ்க்கை பிரயாணம் செய்யும் நாம் மனதை சுமக்கிறோம். இவை இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


மனதை கீழே இறக்கி வெச்சிட்டா பாரம் இல்லாமல் வாழலாம். பறவைகள் மாதிரி பறக்கலாம் குழந்தை மாதிரி கள்ளங்கபடம் இல்லாமல் வாழலாம். இந்த வெளி உலகத்தில் நாம் நிலைபெற்று வேரூன்றி இருக்கனும்
அதே சமயம் நம் உள்வெளியில் பாரமில்லாமல் இருக்கனும். அப்படின்னா பறக்கனும், நதியை போல ஓடனும், மிதக்கனும் பயனம் சுகமாக இருக்கும் களைப்பு தெரியாது; கவலை தெரியாது.
ஒரு சீடன் போதி தருமரை நாடி வந்தான். குருவே நீங்கள் என்னை வெறுமையாக இருக்க சொன்னீங்க நான் இப்பொழுது வெறுமையானவன் ஆகிவிட்டேன், இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்த குரு பக்கத்தில் இருந்த ஒரு குச்சிய எடுத்து சீடன் தலையில் தட்டி , போய் அந்த வெற்று தன்மையையும் வீசிவிட்டு வா என்று கூறினார்.
ஒருத்தன், இப்பொ நான் காலியா இருக்கென்னு சொன்னான்னா அவன் காலியா இல்லைனு அர்த்தம், ஏன்னா அதில் இன்னும் “நான்” என்ற சொல்(எண்ணம்) இருக்கின்றது.
எந்த சிந்த்தனையும் இல்லாமல் இருப்பது கடினம் தான் ஆனாலும் மனிதன் அதனுள் இருக்கும் நுட்டபத்தை புரிஞ்சிகிட்டானா இவ்வளவு தூரம் தூக்கி சுமந்த மனதின் முட்டாள் தனத்தை எண்ணி அவனே சிரிப்பான்.
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறகை போன்ற மனம் வேண்டும்”

Thursday, January 12, 2017

எனில் நாம் இந்தியர்


 *************** ** நாம் இந்தியர் ***

ஜல்லிக்கட்டினை
தடை செய்தாலும்
பொங்கல்க்கு
விடுமுறை மறுத்தாலும்
நாம் மறுத்திடவோ
போராடவோ கூடாது
எனில் நாம் இந்தியர்!!!!

காவேரியில்
தண்ணீர் தரமறுத்து
அங்குள்ள
தமிழர்களையெல்லாம்
தீயிட்டழித்து கொள்ளையிட்டாலும்
நாம் கன்னடர்களை
கவனமாய் காத்து
எப்பவும் போல
மின்சாரம் அளித்தோம்
எனில் நாம் இந்தியர்!!!!!

முல்லை பெரியாறு
அணை பிரச்சனையில்
தமிழ் பெண்களை
துயில் உரித்தப் போதும்
அமைதி காத்திட்டோம்
இங்குள்ள கேரள
நிறுவனங்களுக்கு
பாதுகாப்பு பணியினை
பலமாக சிறப்பாக செய்தார்கள்
தமிழக காவல்துறையினர்
எனில் நாம் இந்தியர்!!!!!

எம் தொப்புள் கொடியாம்
ஈழத்தமிழினம்
இந்திய அரசின்
ஆயுத உதவியுடன்
கொன்றொழிந்த போதும்
அமைதி காத்திட்டோம்
எனில் நாம் இந்தியர்!!!!

எங்கோ பயனடைய
மீத்தேன் திட்டத்தை
எம் விவசாயியின்
விவசாய நிலத்தில்
புதைத்த போதும்
அமைதி காத்திட்டோம்
எனில் நாம் இந்தியர்!!!!!!

அண்டை மாநிலத்தில்
மீனவர்கள் அயல் நாட்டின்
இராணுவ வீரர்களால்
கொல்லப்பட்டப் பொழுது
சட்ட மன்றம் மட்டுமல்ல
பாராளுமன்றமும் பேசியது
அக்கொலையாளிகளை தண்டிக்க
ஆனால் நூற்றுக்கணக்கான
மீனவர்கள் நட்பு நாட்டின்
இராணுவத்தினரால்
அடிக்கப் பட்டும்
உடைமைகளை இழந்தப் போதும்
வாய் திறக்கவில்லை இந்தியா
எனில் நாம் இந்தியர்!!!

மரித்த உழவர்களுக்கும்
மரித்த மீனவர்களுக்கும்
எங்களின் மனங்கவர்ந்த
தமிழக முதல்வர்
மரணத்தின் மர்மத்தையெல்லாம்
கவனிக்காத
இந்திய அரசு
தமிழர்களின் வீரத்திலும்
தமிழர்களின் பண்பாட்டிலும்
தடை போடுவது ஏனோ??????

அன்றைக்கு கச்சத்தீவு
இன்றைக்கு ஜல்லிக்கட்டு
இப்படி தமிழரின்
உரிமைகளெல்லாம்
பறிக்கப் பட்டாலும்
போராடுகின்ற
தமிழரை அடிதடி நடத்தியும்
வழக்கு போட்டும்
கடமையாற்றிடுவார்கள்
எங்கள் காவல்துறையினர்
எனில் நாங்கள் இந்தியர்!!!!

நாம் இந்தியர்
நாம் இந்தியரென்று
இந்தியர்கள் அனைவரும்
சகோதரர்கள் என்று
தமிழர்கள் தான்
நினைக்கின்றோம்
ஆனால் இந்தியர் யாரும்
நினைக்க வில்லை
தமிழர்கள்
இந்தியர்கள் தானென்று

Tuesday, January 10, 2017

நம்பினால் நம்புங்கள்

சில விடை தெரியா மர்மங்களை இங்கு காண்போம்.....
**) மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)
பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே, நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?
**) ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)
நம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம்.
உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

Wednesday, January 4, 2017

தெரியுமா உங்களுக்கு??



சில விஞ்ஞானோ உண்மைகளையும் சம்பவங்களையும் இங்கு பார்ப்போம்.
*ஒரு ஆண் தன் வாழ்நாளில் 6 மாதங்களை ‘முகச் சவரம்’ (ஷேவ்)செய்வதற்கு எடுத்துக்கொள்கிறானாம். அதே போல் நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தாலும் ஆறு மாத காலங்களை வீணாக்குகிறீர்களாம்!
* உங்களுக்குத்தெரியுமா, முதலில் ‘ஹை ஹீல்ஸ்’ செருப் பு ஆண்களுக்காகத்தான் உருவாக்கப்பட்ட தாம். ஆண்கள் ‘ஹை ஹில்ஸ்’ அணிந்து வீதிகளில் நடந்து வந்த கால ங்கள் இருந்தனவாம். பின்னர்தான் அதை பெண்கள் ஆக்கி ரமித்துக் கொண்டனராம்.
*பெண்களின் மூளை அளவை விட ஆண்களின் மூளை அளவு 10 வீதம் பெரியதாம். கடினமான தோல்களை கொண்டதால் தான் இப்படி பெரியதாம். அதற்கும் மூளையும் செயல்பாட்டு க்கும் சம்மந்தம் இல்லையாம்!
* கவலை தரும் செய்தி ஒன்று : ஒவ்வொரு 90வது நொடிக் கும் ஒரு பெண், பிரசவத்தின் போது இறக்கிறாளாம் என ஆய்வு சொல்கிறது.
*பெண்கள் அதிகமாக பேசுகிறாள் என்று வருத்தப்பட்டிருக்கி றீர்ளா..? ஒரு நாளைக்கு பெண்கள் சராசரியாக 20 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களாம். ஆண்கள் அப்பாவி , வெறும் 13 ஆயிரம் வார்த்தைகளை தாண்டுவதில்லையாம்.. (ஒரு வார்த்தை கூட பேசத் தயங்கும் பெண்களு ம் உண்டு, இவ்வுலகில்ஸ! )
*உலகில் பணக்கரப்பெண்களை கணக்கிட்டால் இருபதில் ஒருவர்தான் சொந்தமாக பணக்காரர் ஆவராக இருக்கிறா ராம். ஏனையவர்கள் தங்கள் அப்பாவின் சொத்து மூலமா கவோ, கணவரின் சொத்து மூலமாகவோ பணக்காரர் ஆனவர்களாம்.
* மிக சுவாரஷ்யமான செய்தி ஒன்று : ஒரு பெண்ணால் சராசரியாக 47 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் தான் தங்கள் ரகசியத்தை பேண முடியுமாம். (அடடே..)
* எந்த உடையை அணிந்து வெளியில் செல்வது? என்ற யோசனைக்கு வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவு செய் கிறார்களாம் பெண்கள்!
* உங்கள் மூளை தினமும் சிந்தித்துக்கொள்ள உடலில் இருந்து 20 தொடக்கம் 30 விழுக்காடு கலோரிகளை எடுத் துக்கொள்கிறதாம்.
* ஆணோ, அல்லது பெண்ணோ தனது 35 வது வயதை அடைந்து விட்டதும், தினமும் 7000 மூளை செல்களை இழக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம்.
*‘ஒக்ஸ்போர்ட்’ ஆங்கில அகராதியில் 2006 ஆம் ஆண்டு ‘கூகுள் ’ என்ற வார்த்தை பெயர்ச்சொல்லாக சேர்க்கப்பட்டது! மெக் டொனால்ட் உணவகத்தின் ‘டுவிட்டர்’ கணக்கை பராமரி க்க 10 பேர் வேலை செய்கிறார்களாம்.
* லண்டனில் ஒவ்வொரு பெண்ணும், தன் வாழ்நாளில் சராசரியாக 111 கைப்பையை சொந்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம்.
* நாங்கள் அசதியாக இருக்கிறது என தூங்கி ஓய்வெடுக்கிறோம். ஆனால் இந்த விஞ்ஞானிகளால், ஏன் நாம் தூங்குகிறோம் என்ப தற்கான சரியான காரணத்தை இன்று வரை கண்டறிய ப்படவில்லை என்பதே உண்மையாம்.

கொஞ்சம் சிரிங்க பாஸ்..

கொஞ்சம் சிரிங்க பாஸ்
1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
------------------------------------------------------------------------------------
2. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா கோதுமை மாவு வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
------------------------------------------------------------------------------------
3. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
------------------------------------------------------------------------------------
4. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,
அதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது .! ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. வடச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..?
------------------------------------------------------------------------------------
6. ஒரு தத்துவம் :
'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்."!
------------------------------------------------------------------------------------
7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .?
முடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.!
------------------------------------------------------------------------------------
8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..?
Nokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.!
------------------------------------------------------------------------------------
9. ஒரு உண்மை :
கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,
ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .!
------------------------------------------------------------------------------------
10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?
------------------------------------------------------------------------------------
11. மறுபடியும் சந்தேகம் :
இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..?
------------------------------------------------------------------------------------
12. கரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..?
கரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .!

Tuesday, January 3, 2017

நம்பினால் நம்புங்கள்

Elisa Lam

 அமெரிக்கவில் 2013 ஆம் ஆண்டு இப்பெண் உயிரிழந்தார். ஆனால் எதற்காக இவர் உயிரிழந்தார் என்பது இதுவரை அறியப்படவில்லை.

                                  
இவரது உடல் ஒரு தண்ணீர் தொட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள மர்மம் என்னவென்றால் இவர் இறந்தபின்னர் elevator க்குள் அடிக்கடி உள்ளே வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
White Lady
1975 ஆம் ஆண்டு Norfolk - இல் அமைந்துள்ள Worstead தேவாலயத்தில் Diane Berthelot என்ற பெண் அமர்ந்து மன்றாடிக்கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் ஒரு வெள்ளை உருவம் இருந்தது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

                                        
அந்த வெள்ளை உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது. ஆனால் யார் எந்த வெள்ளை பெண்மணி என்பது குறித்து இன்றுவரை அறியவரவில்லை.
Mary And The UFO
மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட மாதாவின் இந்த படம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. ஆனால் இந்த ஓவியத்தின் பின்னால் உள்ள பறக்கும் தட்டு எதற்காக? அது உண்மைதானா? என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை.

                                                 
மாதாவின் புகைப்படத்திற்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் நபருக்கு அருகில் நாய் ஒன்று நிற்கிறது. நாயுடன் நிற்கும் அந்த நபர் வானில் பறக்கும் மர்மதட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இதற்காக விளக்கம் இதுவரை அறியப்படவில்லை.