வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, November 11, 2016

மனமே மனமே

மனமே மனமே
தடுமாறும் மனமே
படைத்தவன் மீது
நம்பிக்கை கொண்டால்
படைப்புகளை ஏன்
நம்பிட வேண்டும்
ஏன் இழந்திட வேண்டும்???

படைப்புகளை அல்ல
படைத்தவனை நம்பிடு
அவனின் படைப்புகளை
அவனே நம்புவதில்லை
நீயேன் நம்புகின்றாய்?????

நம்புவதும்
எதிர்பார்ப்பதும்
நம்பிநம்பி
இழப்பதும்
எதிர்பார்த்து
ஏமாறுவதும்
பழக்கப்பட்ட ஒன்றா உனக்கு?????



சொல் அழகிலும்
வார்த்தை ஜாலங்களிலும்
படைப்புகளை நம்பிவிடாதே
உதடுகளின் கோலம்
உள்ளத்தின் அலங்கோலத்தை
மறைத்திடவே

மாற்றம் ஒன்றே
மாறாதவை தான்
ஆனால் மாற்றம்
எப்போது என்று
தெரிந்துவிட்டால்
மனதில் அமைதி நிலவுமே!!!!

Tuesday, November 8, 2016

மழையோடு விளையாடு.....


** மழையோடு விளையாடு **

விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு
துள்ளித்துள்ளி விளையாடு
மழையோடு விளையாடு

மழைத்துளி மண்ணுக்கு மட்டுமல்ல
உயிர்களுக்கெல்லாம் உயிரே
மழைத்துளி!!!

ஓடியாடி விளையாடு
உருண்டுபுரண்டு விளையாடு
மழையோடு விளையாடு

இறைவனின் அருட்கொடையின்
உருவமே விண்ணின் மழைத்துளி!!
குற்றமில்லை குறையுமில்லை
எந்தவொரு பாதிப்புமில்லை
துள்ளித்துள்ளி விளையாடு!!!

விண்ணின் துளிகள்
உச்சந்தலையில் கொட்டி
காலடியில் விழும்போது
உற்சாகமும் புரண்டிடுமே!!!

உடம்பின் ஒவ்வொரு
அங்கங்களும் மாற்றத்தை
உணர்ந்திடுமே
மனசெல்லாம் புத்துணர்வும்
பிறந்திடுமே!!!!

மழையோடு விளையாடு
உடலினை அனைத்திடும்
மழைத் துளிகள்
உடம்பின் சூட்டினையும்
அணைத்து குளிர்வித்திடுமே

மழையோடு விளையாடு
மழலையோடு விளையாடு
மழைத்துளிகளும் முத்தமிடட்டும்
உன் மழலையை!!!!


எக்கலப்படமில்லாத
தண்ணீரினை உன்மழலையும்
ரசித்து ருசிக்கட்டுமே!!!


விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு
விண்ணை தொட முயற்சித்து
துள்ளிகுதித்து விளையாடு


மழைத்துளி நீரினில்
மின்னிடும் மின்னல்களின்
அழகைப் பார்!


விண்ணில் புறப்பட்டு
மண்ணில் சங்கமாகிடும்
மழைத்துளியைப் போல்
வாழ்கின்ற வரையில்
உனது வாழ்க்கையும்
பிறர்க்கு பயன்படும்படி
வாழ்ந்திட பழகிக்கொள்!!!!


மழைத்துளி மழைத்துளி
நல்லவர் கெட்டவர்
பார்த்து பொய்வதில்லை
நீயும் அன்பினை செலுத்து
உயிர்கள ணைத்தின் மேலும்

விளையாடு விளையாடு
மழையோடு விளையாடு

வார்த்தைகளெனும் ஆயுதம்





விழிப் பார்வையில்
கவர்ந்திழுக்கின்றாய்
காயங்களில்லாது
ஆனால் நெருங்கிடும் போது
வார்த்தைகளினால்
எந்தன் மனதை
சுடுவாளினால் வீசி
காயப்படுத்துகின்றாய்!


உந்தன் வார்த்தைகள்
செவிகளில் அல்ல
மனதினில் விழுகின்றது
ஆறிடா காயங்களாக!!!

மனமெனும் குரங்கு ........


** மனமெனும் குரங்கு **

விலகிச் செல்வதை
விரட்டி விரட்டியே
விரும்புகின்றது!!!

விரும்பி வருவதை
விரும்பி ஏற்காமல்
விலகி விலகியே
விலகுகின்றது!!!!

வலிகளெ டுத்தாலும்
வலிக் கொடுத்தவர்
மனதிற்கு பிடித்து விட்டால்
வலிகளுக்கு மருந்திடவும்
அவரையே தேடுகின்றது!!!


கிடைக்காதென
அறிந்த போதிலும்
கிடைக்குமோ வென்ற
எதிர்ப்பார்ப்பினில்
காத்தே கிடக்கின்றது!!!


தப்பா சரியா
என்பதையெல்லாம்
புறந்தள்ளி
தான்
விரும்பிய வற்றை
எண்ணியே சுழல்கின்றது!!!

மனம் எண்ணியெண்ணி
நினைவுகளில் மோதிமோதி
செயல்களிலும் மனதின்
நிழல்கள் தெரிகின்றதே!!!

பணம் பணம்............


மனிதா மனிதா
உன் வாழ்வின்
அடுத்த நொடியில்
நடப்பதை உன்னால்
உறுதிப்படுத்த இயலுமா?????

உன் கோபத்திற்கும்
உன் ஆணவத்திற்கும்
உன் பேராசைக்கும்
உன் செல்வத்திற்கும்
மரணம் விலகிடுமா?????

இந்த நொடியில்
நீ செல்வந்தனாக
இருக்கலாம்
நீ அறிவாளியாக
இருக்கலாம்
நீ யாராகவும்
இருக்கலாம்
ஆனால்
அடுத்த நொடியில்
உன் இருதயம்
நின்று விட்டால்
உன் பெயர் "பிணம்"
அதைப் புரிந்துக் கொள்


இந்த நொடியில்
அடுத்தவரை ஏமாற்றி
அடுத்தவரிடம் பறித்து
பணம் சேர்த்திருந்தாலும்
அடுத்த நொடியில்
நீ மரித்தால்
அப்பணம் உன்னுடையது அல்ல!!

நீ பணக்காரன்
நீ அரசியல்வாதி
நீ கோபக்காரன்
என்பதற்காக
மரணம் உன்னைவிட்டு
விலகிச் செல்லாது!!

வாழ்கின்ற நொடியினில்
நல் மனிதனாக
நல் தலைவனாக
நல் குடும்பஸ்தனாக
நல் தகப்பானக
நல் கணவனாக
நல் மனைவியாக
வாழ்ந்து விடு...................

உறவுகள்............


துண்டிக்கப்பட்ட
உறவுகள்
காலத்தால் மீண்டும்
இணைந்தாலும்
விரிசலின் வீரியம்
மறைந்தால் மட்டுமே
மீண்டும் அந்த
பழைய அன்பும் நட்பும்
தோன்றிடும் புதியதாய்!!!!!


மனதின் காயங்களை
வடுக்காளக
எண்ணிடும் வரையில்
உறவுகளில்
பூரண அன்பும்
பூரண நம்பிக்கையும்
ஏற்படாது!!!!!

என்றும் என்னவள் என்னுள்


என்னவளைப் பற்றி
கவிதையெழுதிட
வேண்டுமென்று
நீண்ட நாட்களாய்
ஆசை.........

முயன்றேன் முயன்றேன்
பல நாட்களாக
பல மாதங்களாக
பலமுறை பேனா எடுத்தும்
என்னவளை எழுத்துக்களில்
அடக்க முடியவில்லை!!!
அவளை நினைத்து
எழுதினாலும்
எழுதிய வார்த்தைகள்
அவளுக்கு
நிறைவாக வில்லை!!!
அவளை
பார்த்து ரசித்து
எழுதிட முயன்றாலும்
எழுத்துக்களெல்லாம்
அழகா கின்றது
ஆனால் அதில்
என்னவள் இல்லை!!!!
இயற்கையோடு
ஒப்பிடலாம் என்றாலும்
இயற்கை அன்னையும்
ஒத்துழைக்கவில்லை
என்னவளோடு ஒப்பிடுவதற்கு!!!!


கருமேகத்தோடு
அவள் கருங்கூந்தலை
ஒப்பிடலாம் என்றவுடன்
வெட்கத்தால் மேகமும்
மூடி கொண்டது!!!!
வேறு கிரகங்களில்
எல்லாம் தேடினேன்
என்னவளை பற்றி எழுதிட
ஆனாலும் வெறுமையும்
தேடலும் தான்
அதிகமானது!!!!
எனக்குள் நானே
கேட்டு பார்த்தேன்
விடை அறிந்தேன்
ஒரு நாள்!!
"இருதயத்திற்கு
வெளியில்
இருப்பவற்றை பற்றி
கவிதை எழுதிடலாம்
கட்டுரை எழுதிடலாம்
வர்ணித்தும் எழுதிடலாம்
இயற்கையோடும் ஒப்பிடலாம்
ஆனால் ஆனால்
.
.
.
இருதயத்திற்குள் துடிப்பாய்
இருப்பவளைப் பற்றி
எப்படி எழுதிட முடியும்
என்றான் என்
மனச்சாட்சி.....ஆம்
என்னவள் என்னுள்
நானாய் துடிக்கின்றாள்
எனக்காக என்னோடு
நினைவுகளோடு!!!!!

என்னுள்ளே... .என்னுள்ளே


காதலெனும் சுவாசம்
என்னுள் நுழைவதால்
என்னுள்ளே உன்னை
வளர்க்கின்றேன்
வலி யில்லாது
சுமை யில்லாது
உந்தாய் உன்னை
சுமந்ததை விட
என்னுள் அதிகமாய்!!

மனித வாழ்க்கை...............


போய்ட்டு வர்றேன்
என்று சொன்னவர்
அவர்
திரும்ப வரவில்லை...
நான் பார்க்க சென்றேன்
நான் வந்ததை
அவர் அறியாது
சடலமாக வீற்றிருக்கின்றார்.....



செல்லும் பொழுது
அவர்க்கும்
தெரியவில்லை
மீண்டும் அவரால்
வர முடியாதென்று.......
விடை கொடுத்திட்ட பொழுது
எனக்கும்
தெரியவில்லை
அவர் வரமுடியா
இடம் செல்லப்
போகிறாரென்று.......

மகிழ்ச்சியான குடும்பம்





திருமணமெனும்
பந்தம் முழு
அர்த்தமு டையதாய்
மாற வேண்டுமெனில்
மன்னித்தல்
மறத்தல்
இருவருக்கும் வேண்டும்!!!





இதில்
ஆண்னென்ன
பெண்னென்ன
குடும்ப உறவு
சிறப்பாக வேண்டுமென்றால்
மன்னித்தலிலும்
மறப்பதிலும்
போட்டிபோட்டுக் கொண்டு
முன் நிற்க வேண்டும்!!!!!

மகிழ்ச்சி................


அழகான
ரோஜா மலரில்
மலரை ரசித்தால்
மகிழ்ச்சி!!
அந்த மலரின்
கீழ் இருக்கும்
முள்ளை ரசித்தால்
துன்பம்!!



நீ பார்க்கும்
பார்வையில் தான்
உன் வாழ்வின்
இன்பமும் துன்பமும்!!!!!

உன்னை பார்த்த பின்பு நான்...


உன் நிழல்
தொடராத நேரத்திலும்
தொடர்கின்றேன் உன்னை
நினைவுகளில்


உன்னை
நீ சிந்திக்காத
நேரத்திலும் சிந்திக்கின்றேன்
உன்னைக் குறித்தே!!

தோழியே எந்தோழியே................


தோழியே தோழியே
எந்தோழியே

கவலையெனும்
மூட்டையினை
ஏன் சுமக்கின்றாய்
தலையினில் உயர்த்தி

கவலைகள் இல்லாத
பிரச்சனைகள் இல்லாத
மனிதர் யாருமேயில்லை

பிறந்திட்ட குழந்தை முதல்
பல்விழுந்தவர் வரைக்கும்
பிரச்சனைகளும்
துயரங்களும் உண்டு தோழி!!


எனக்கு தான் சுமை
எனக்கு மட்டுமே சுமையென்று
சொல்லி சொல்லி ஏன்
உன் மகிழ்வான வாழ்வை
துன்பமாக்குகின்றாய்
நீ அழுவதாலும்
சோகமாய் இருப்பதாலும்
மாறிவிடுமா உன்
பிரச்சனைகள்!!!
தோழி தோழி
மகிழ்ந்திருக்கும் பொழுதினை விட
அழுதிடும் பொழுது
உடலின் அதிகமான வேலை
நடக்கின்றது என
மருத்துவம் சொல்கின்றது……..
கவலைகளினால் துன்பப்பட்டு
துன்பப்பட்டு ஏன்
உன்னை நீயே உருக்குகின்றாய்!!!!
இல்லாததை எண்ணியெண்ணி
வருந்துவதை விட
இருப்பதை எண்ணியெண்ணி
மகிழ்வாக வாழ்ந்திடு!!!!!
செருப்பில்லையென
வருந்தியவன்
காலி ல்லாதவனை கண்டவுடன்
மகிழ்வாய் எழுந்து
வெறும் காலில் ஓடினான்!!!
எல்லோர்க்கும் எல்லாம்
கொடுத்திட இறைவன்
ஒன்றும் முட்டாள் இல்லை
துன்பங்களை தாங்கிடும்
வல்லமை உன்னிடம்
இருப்பதால் தான் உன்மேல்
துன்ப பாரங்களை ஏற்றுகின்றான்!!!
இன்றைய துன்பம்
நாளைக்கும் மாறும்
என தெரிந்தும் ஏன்
இன்றைய பொழுதினை
துயரத்தோடு கழிக்கின்றாய்!!!

தோழி தோழி
மகிழ்வாய் இரு
சந்தோஷமாய் இரு
புன்னகையுடன் இரு

வாடியிருக்கும் மலர்கள்
அழகு சேர்ப்பதில்லை
அதுபோல் வாடியிருக்கும்
முகம் அழகு சேர்ப்பதில்லை
குடும்பத்திற்கு!!!!

குடும்பம்
பூந்தோட்டமாக இருப்பதும்
முட்புதராக இருப்பதும்
தோழி உந்தன்
சிரிப்பினிலே
தோழி உந்தன்
மகிழ்வினிலே

சிரி சிரி சிரி
மகிழ்வாய் என்றும் சிரி
உண்மையாய் சிரி
சிரித்திடும் உள்ளம்
என்றைக்கும் சோர்வதில்லை
சிரித்திடும் உடல்
என்றும் பலவீனமாவதில்லை!!!!

பெண் என்பவள்


விலகி போனால்
விரும்பி வருவாள்
விரும்பி சென்றால்
விலகி செல்வாள்!!!




தேடினால் மறைவாள்
மறைந்தாள் தேடுவாள்
கேட்டால் மவுனிப்பாள்
மவுனித்தால் கேட்டிடுவாள்
பெண் என்றும்
ஒரு புதிரான புதிராய்
ஆண்களுக்கு