வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, July 31, 2012

இறைவா உம் அன்பு



கொடிய‌ வனாந்தரம் போன்ற‌
என் வாழ்வினில் நாம்
இம்மட்டும் உயிரோடு இருப்பது
இறைவா உம் அன்பாலே.....
புதைமணல் போன்ற‌
நிந்தைகளிலும் ஆதரவாய்
அணைத்தீர்
இறைவா உம் அன்பாலே....


யாருமில்லை உதவிட‌
என்று தனித்திருக்கையில்
நானிருக்கின்றேன் என்று 
என்னை தேற்றியது
இறைவா உம் அன்பு........


கரும்இருட்டான‌
என் வாழ்விலும்
மெய்யான ஒளியாய்
அணைத்தீரே
இறைவா உந்தன் அன்பாலே......


மனங்கலங்கி வார்த்தைகளில்லாமல்
விழி நீரால் உம்முடன்
யுத்தம் பண்ணிய‌ போதெல்லாம்
வார்த்தைகளினால் என் 
கண்ணீர் துடைத்தீரே
இறைவா உம் அன்பாலே....


முடிவில்லாத‌ பிரச்சனைகளில்
நட்பும் உறவும் என்னை
விட்டு அகன்ற‌ போதும்
உந்தன் வார்த்தைகளால்
என்னை தைரியப்படுத்தினீரே
இறைவா உம் அன்பாலே......


செல்லவும் வழியில்லையே
பிரச்சனைகளை ஜெயிக்கவும்
வழிகளில்லையே என்று 
பரிதவித்த‌ போதும் ‍ 
"நான் புதிய காரியத்தை 
செய்கின்றேன்" என்று சொல்லி
சூழலையும் மனதினையும்
மாற்றினிரே 
இறைவா உம் அன்பாலே.........


என்னிலும் 
பலவானாயிருந்த‌ என் 
சத்துருக்கள் மத்தியிலும்
சத்துரு என்னை மேற்கொள்ளாது
எனக்கு ஜெயம் தந்தீரே
இறைவா உந்தன் அன்பினாலே......


இறைவா உம் அன்பு
தேனிலும் மதுரமே
துன்பத்திலும் இன்பமே
மாறாதது நிலையானது
தனிமையிலும் என்னுடனாய்
அழுகையிலும் ஆறுதலாய்
இறைவா உம் அன்பு
மாத்திரம் போதும் எனக்கு..........


நேசிக்கும் போது
நன்கு நேசித்து
எதிர்ப்பார்ப்பு பொய்யானால்
இதயத்தையே பிடுங்கி எறியும்
உள்ளங்களின் அன்பு வேண்டாம்..


என்றும் மாறாத‌
என்றும் விலகிடாத‌
கண்டித்தாலும் அன்பை விலக்காத‌
இறைவா உந்தன் அன்பே 
எனக்குப் போதும்........

      எல்லா புகழும் என்னைப் படைத்த‌ இறைவன் ஒருவனுக்கே........