வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, May 14, 2012

காதல் அந்தாதி

காதல் காதல்
என் வாழ்வினை
உணரச் செய்தது காதல்
என் துயரினை
இலகுவாக்கியது காதல்
என் இன்பத்தினை
பெருகச் செய்தது காதல்
என் அழுகையினையும்
ரசிக்கச் செய்தது காதல்
என் தனிமையையும்
விரும்பச் செய்தது காதல்
என் சுவாஷத்தையும்
உணரச் செய்தது காதல்
என் நிழலையும்
கவிதை வடித்தது காதல்
நான் நானாக‌
பேச செய்தது காதல்
என் கோபத்திலும்
சிரிக்க‌ வைத்தது காதல்
என் எழுத்தையும்
அழகாக்கியது காதல்
மரணத்தையும்
வெறுக்க‌ செய்தது காதல்
காதல் காதல் காதல்
காதல் போயின் வாழ்தலில்
இல்லை காதல்

No comments:

Post a Comment