
ஒற்றை வரியினில்
இலக்கணமில்லாது
அன்போடும்
காதலோடும்
நான் அழைத்திடும்
கவிதை
அவள் பெயர்!
விழிகளில் உட்வாங்கிய
நாள்முதல்
வருடங்கள் பலகடந்தாலும்
அன்பெனும் உயிரூற்றி
காதலெனும் விருட்சமாய்
என்னுள் இதயமாய்
துடிப்பவளே!
நாள்முதல்
வருடங்கள் பலகடந்தாலும்
அன்பெனும் உயிரூற்றி
காதலெனும் விருட்சமாய்
என்னுள் இதயமாய்
துடிப்பவளே!
துடிக்கின்ற என்னிதயம்
ஏனடி மறுக்கின்றது
எனக்காய் துடித்திட!
ஏனடி மறுக்கின்றது
எனக்காய் துடித்திட!
விடைக்கொடு கோபத்திற்கு
நீரில் மிதந்திடும்
பூகோளமாய் உன்னுள்
நான் மிதக்கின்றேன்
நின் நினைவுகளில்
என்றுமே!
நீரில் மிதந்திடும்
பூகோளமாய் உன்னுள்
நான் மிதக்கின்றேன்
நின் நினைவுகளில்
என்றுமே!
வழிகள் இல்லா
வாழ்க்கையில்
என்றும் வலிகளோடு
பயணிக்கின்றேன் நான்!
வாழ்க்கையில்
என்றும் வலிகளோடு
பயணிக்கின்றேன் நான்!
என் வாழ்வில்
எனக்காக வந்திட்ட
முதல் வெற்றியடி!
எனக்காக வந்திட்ட
முதல் வெற்றியடி!
நட்புகள்
உறவுகள் பலயிருந்தாலும்
என்னுள் இதயமாய்
உன் நினைவுகளே
என்றும்!
உறவுகள் பலயிருந்தாலும்
என்னுள் இதயமாய்
உன் நினைவுகளே
என்றும்!
விழிகளில்
காட்சிகள் பலயிருந்தாலும்
விழும் பிம்பமாய்
உன்னுருத் தானடி
என்றும்!
காட்சிகள் பலயிருந்தாலும்
விழும் பிம்பமாய்
உன்னுருத் தானடி
என்றும்!
காதலை
சுவாசிப்பவன் நானடி
காதலின் உருவமாய்
நீயிருப்பதால்!
சுவாசிப்பவன் நானடி
காதலின் உருவமாய்
நீயிருப்பதால்!
என் வலிகளையெல்லாம்
மறந்தேன்
உந்தன் புன்னகைக் கண்டு!
மறந்தேன்
உந்தன் புன்னகைக் கண்டு!
தோல்விகளையும்
இழப்புகளையும்
கண்டே வளர்ந்திட்ட நான்
ஆறுதலடைவது
உந்தன் அன்பில் தானடி!
இழப்புகளையும்
கண்டே வளர்ந்திட்ட நான்
ஆறுதலடைவது
உந்தன் அன்பில் தானடி!
மரணம் என்னை
நெருங்கி வந்தப்பொழுதும்
தவிர்த்து சென்றதடி
உன்மீதான
என் காதலினால்!!
நெருங்கி வந்தப்பொழுதும்
தவிர்த்து சென்றதடி
உன்மீதான
என் காதலினால்!!