வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, June 5, 2017

காதல் கோட்டை

                     
வெட்கமெனும்
சொல்லின் 
உருவம் கண்டேன்
அவளை பார்த்தப் பின்பு!

அவள் விழிகளை
ரசித்திடுகையில்
என் வழியினை
நினைக்க மறக்கின்றேன்!

அவளின் பேச்சில் அல்ல
மவுனப் புன்னகையில்
அறிகின்றேன் ஆயிமாயிரம்
காதல் கவிதைகள்!

           
                       Image may contain: 2 people


அவளின் வில் புருவத்தில்
புறப்பட்ட பார்வை அம்பு
என்னிதயத்தில்
காதல் கோட்டையாக!!

என்னிலை மறந்து
நேசிக்கின்றேன் அவளை....
தன்னிலை உணர வைத்திடுமோ
அவளின் காதல்!

அவளின் செவ்விதழ்கள்
சொல்லிடத் தான்
துடிக்கின்றன
என் மீதான காதலை
ஆனால் அதனை
அடைத்திடுகின்றதே
பெண்ணின் நாணம்!!

செலவில்லாமல்
நேரங் கழிக்கின்றேன்
அவளை ரசித்துக் கொண்டே
காதலுடன்!





                                    

No comments:

Post a Comment