வெட்கமெனும்
சொல்லின்
உருவம் கண்டேன்
அவளை பார்த்தப் பின்பு!
அவள் விழிகளை
ரசித்திடுகையில்
என் வழியினை
நினைக்க மறக்கின்றேன்!
அவளின் பேச்சில் அல்ல
மவுனப் புன்னகையில்
அறிகின்றேன் ஆயிமாயிரம்
காதல் கவிதைகள்!

அவளின் வில் புருவத்தில்
புறப்பட்ட பார்வை அம்பு
என்னிதயத்தில்
காதல் கோட்டையாக!!
என்னிலை மறந்து
நேசிக்கின்றேன் அவளை....
தன்னிலை உணர வைத்திடுமோ
அவளின் காதல்!
அவளின் செவ்விதழ்கள்
சொல்லிடத் தான்
துடிக்கின்றன
என் மீதான காதலை
ஆனால் அதனை
அடைத்திடுகின்றதே
பெண்ணின் நாணம்!!
செலவில்லாமல்
நேரங் கழிக்கின்றேன்
அவளை ரசித்துக் கொண்டே
காதலுடன்!
No comments:
Post a Comment