வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, July 27, 2017

மனங்கவர் கள்வனடா..................

நெருங்குவது
தெரியாமலே
நெருங்குகின்றான்!!

விலகுவது
தெரியாமலே
விலகிடுகின்றான்!!!

பதுக்குவது
தெரியாமலே
பதுக்குகின்றான்
நினைவுகளை!!!

நிஜத்தில்
இல்லாமலே
நிழலில்
வாழ்கின்றான்!!!

நினைக்காதே
என ஆணையிட்டாலும்
என்னையும் மீறி
போனையே பார்க்கின்ற
விழிகள் அவனின்
அழைப்பிற்காக
தவமாய் தவமிருந்து!!!

வினையையும்
எதிர் வினையையும்
ஆராய்ந்து பேசிடும்
நான்
எதிர் வினை
நினையாமலே
அவன் பெயரை
பேசிக் கொண்டிருக்கின்றேன்
மற்றவர்களிடமும்.........

என்னுள்ளே
இருந்தாலும்
என்னையும்
இன்பத்தில் ஆழ்த்துகின்றான்
என்னையறியாமலே



என்னை அறியாமலே
என்னை
தவிக்கவிட்டு
இன்பங் கொள்கின்றான்
மனங்கவர் கள்வனடா!!!!

No comments:

Post a Comment