**************** நீ வருவாயென.....
என்னைக் காணாது
மவுனமாக கடந்து செல்கின்றாய்
சாலையினில்……….. ஆனால்
என்னுள் ஆயிரமாயிரம்
நினைவு விதைகளை
தூவியே செல்கின்றாய்!
மவுனமாக கடந்து செல்கின்றாய்
சாலையினில்……….. ஆனால்
என்னுள் ஆயிரமாயிரம்
நினைவு விதைகளை
தூவியே செல்கின்றாய்!
நொடிப்பொழுதினில் விழிகள்
கண்ட உன்னை
பலமணி நேரங்களாக
நினைத்து நினைத்து
அசைப் போடுகின்றதடி
என் மனது!
கண்ட உன்னை
பலமணி நேரங்களாக
நினைத்து நினைத்து
அசைப் போடுகின்றதடி
என் மனது!

நீயோ ஒன்றும்
பேசவில்லை என்னிடம்………….
உன்னிடம் பேச வேண்டுமென்றே
பல்லாயிரம் முறை பேசுகின்றேன்
கண்ணாடியின் முன் நின்று!
பேசவில்லை என்னிடம்………….
உன்னிடம் பேச வேண்டுமென்றே
பல்லாயிரம் முறை பேசுகின்றேன்
கண்ணாடியின் முன் நின்று!
உன்னிடம் பழகியதில்லை என்றும்
உன்னோடு வாழ்கின்றேன் என்னுள்!
உன்னோடு வாழ்கின்றேன் என்னுள்!
தூக்கத்தில் மட்டுமல்ல என்
துக்கத்திலும் உன்னிலே
ஆறுதலடைகின்றேன் நினைவுகளில்!
துக்கத்திலும் உன்னிலே
ஆறுதலடைகின்றேன் நினைவுகளில்!
வீட்டு வாசலில் கோலமிடும்
அழகை காண
அதிகாலை நேரத்திலேயே
உன் வீட்டுக்கருகில் உள்ள
தேனீர் கடையினில்
தவமிருக்கின்றேன் உந்தன் பக்தனாய்!
அழகை காண
அதிகாலை நேரத்திலேயே
உன் வீட்டுக்கருகில் உள்ள
தேனீர் கடையினில்
தவமிருக்கின்றேன் உந்தன் பக்தனாய்!
உன் விழிகளில்
நான் விழுந்திட வேண்டுமென்றே
உந்தன் நிழலாய் தொடருகின்றேன்!
நான் விழுந்திட வேண்டுமென்றே
உந்தன் நிழலாய் தொடருகின்றேன்!
பின்னால் வருகின்றேன்
உன்னைத் தொடர்ந்து
தொட்டுவிட அல்ல!
உன்னைத் தொடர்ந்து
தொட்டுவிட அல்ல!
என்றாவது என் வாழ்வில்
என்னை தொடர்ந்து
நீ வருவாயென!
என்னை தொடர்ந்து
நீ வருவாயென!
No comments:
Post a Comment