வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, September 28, 2017

ஆறறிவு மானிடனே...............


அடிப்பட்ட விலங்கினத்தை
காப்பாற்றிட அவ்வினத்தின்
விலங்குகள் எல்லாம்
ஒன்றினைந்து போராடுகின்றன
இவ்வுலகில்!

Image may contain: bird
தன்னினத்திற்கு
பிரச்சனை யென்றவுடன்
வேறுபாடுகள் மறந்து
இணைந்து எதிர்க்கின்றன
ஐந்தறிவு உள்ள
விலங்கினங்களும்!

ஆனால் காயப்பட்ட
மனிதனை காப்பாற்றிட
மனித இனம் தயங்குவதும்
விலகி செல்வதும் அன்றி
அதை புகைப்படம் எடுப்பதும்
தகுமோ???

மனித இனத்தில் மட்டுமே
எங்கோ பிரச்சனையென்று
கண்டும் காணாது
கேட்டும் கேளாது
ஒதுங்கிசென்றிடும்
ஆறறிவு மானிடரே
நீர் எவ்விதத்தில்
விலங்கினத்தை விட சிறந்தவர்கள்???

No comments:

Post a Comment