தள்ளிச் செல்
என்று சொல்லியும்
தேடிப் பார்க்கின்றேன்
விழி காணா தூரத்திற்கு
சென்றுவிடுவானோ என்ற
பயத்தினில்!
வராதே
என்று சொல்லியும்
வந்து பார்க்கின்றேன்
எங்கு வராமல்
போய் விடுவானோ என்ற
தயக்கத்தில்!
இதய கதவினை
மூடியே வைக்கின்றேன்
அவனை உள்
வரக் கூடாதென்று அல்ல!
கதவின் பின்னால்
அவனின் தத்தளிப்பை
ரசிக்க வேண்டுமென்றே!
No comments:
Post a Comment