வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, June 14, 2011

என்றும் நினைவில் எந்தை

(கவிதை எழுதப்பட்ட தேதி : 20.09.2001)

என் அன்பு *எந்தையே,

வாழ்வெனும் போராட்டத்தில்
போராடி ‍ களைத்து விட்டாயென்று
எண்ணி ஓய்வெடுக்கச்
சென்று விட்டாயோ!!!!

வீடே உலகமென்று
என்னை வளர்த்தாய்
ஆனால் இன்று
உலகத்தில் என்னை
மட்டும் விட்டுச் சென்றாயோ?.......

வீட்டில் மற்றுமோர்
குழந்தையாக என்
அன்னையை வளர்த்தாய்
ஆனால் இன்று
விவரந் தெரியாத அவரை
தனியே விட்டு விட்டாய்......

பாசத்துடன் நட்பையும்
கண்டிப்புடன் அன்பையும்
ஊட்டி வளர்த்தாய்
இன்று நாங்கள்
யாரிடம் பெறுவோம்
உமது அன்பை.......

எங்களை
தனியே வெளியூர்
அனுப்பக் கூட அனுமதிக்கவில்லை
ஆனால் இன்று
நாங்களில்லாது நீர் மட்டும்
வேற்றுலகம் சென்று விட்டாய்.....

மரணத்தின் பயம்
சிறிது மில்லாமல்
புன்னகையுடன் சென்றுவிட்டாய்
ஆனால் நாங்கள் இன்றும்
உமது நினைவுகளை சுவாஷித்தப்படி
தினந்தோறும் மன வலியோடு
வாழ்ந்து வருகின்றோம்........

எந்தையே
நாங்கள் வாழும் வரை
உமது நினைவும் என்றும்
வளரும் எம்மோடு.....

(* எந்தை : என் தந்தை)

No comments:

Post a Comment