வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, November 5, 2011

என் வாழ்க்கைத் துணைக்கு பிறந்த நாள்

(இன்று என் வாழ்க்கைத் துணைக்கு பிறந்த நாள்)



என் இல்லத்தரசியே,

நின் பிறந்த நாளுக்கு
மண்ணின் மலர்களால் அல்ல‌
விண்ணின் மலர்களால் உனக்கு
மாலைச் சூட்டுகின்றேன்.....

எல்லாப் பெண்களும்
அழகுத் தான்.......
ஆனால் நீயோ
அழகை அழகாக்கப் பிறந்தவள்.............

எனக்கு இறைவனால்
அளிக்கப் பட்ட
உயிருள்ள பரிசுப் பொருள் !!!!!

சுகமோ சுமையோ
உன்னுடன் வாழ்வதில் தான்
அதின் அர்த்தம்........

உன்னுடன் சண்டைப்
போடும் போது தான்
கோபத்தைக் கூட‌
ரசிக்கின்றேன்.........

எந்தன் தூக்கத்திலும்
தூங்காமல் உந்தன்
நினைவுகள்............

என் புன்னகைப் பூவே
நின் முகங் காணும் போது
உலகமெனும் போர்க்களம் கூட‌
ஒரு மலர் தோட்டமாய்
தெரிகின்றது........

நான் வாழும் நாள்
எத்தனை யென்று
எனக்குத் தெரியாது......
ஆனால்
என் கடைசி நிமிடம் வரை
என்னிதயம் காற்றாய்
நின் நினைவுகளை மட்டுமே
சுவாஷிக்கும்.......

நான் மரணிக்கும் தருவாயில்
என் கரு விழிகளில்
உன்னுருத் தெரிந்தால் போதுமடி
மரணம் கூட எனக்கு
சுகமான தூக்கம் தான்........

உனக்கு
பிறந்த நாள் கவிப்பாட‌
உலகிலுள்ள மொழிகளில்
வார்த்தைகள் தேடினேன்..........
ஒரு மொழியிலும் இல்லை.......
என்னப் பரிசு வேண்மென்று
உன்னிடமே கேட்டேன்.......
" உலகமே நீ தான்
நீயே எனக்குத் தான்" என்றாய்.......

என் அன்புக்கு
என் மனைவிக்கு
என் ரோஸ்க்கு
என் இதயத்திற்கு
என் காதலுக்கு
இதயத்தின் ஓசைகளால்
சொல்கின்றேன்........

" பிறந்த நாள் வாழ்த்து"  

No comments:

Post a Comment