வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 17, 2014

இணையத் தோழி ஜெப‌-ராணி...........(பாகம் 2)

யாஹூ சாட் மூலம்
முகமறியா தோழியாய்
அறிமுகம் ஆனாய்!

தினந்தோறும் எழுதிய‌
வார்த்தைகளால் பேசிப்பேசி
போன் நம்பரும் தந்தாய்
நட்பினைத் தொடர‌!

தினந்தோறும் வீசிடும்
புதிய தென்றல் போல‌
சுவாஷிக்கும் காற்றினைப் போல
ஒவ்வொரு நாளும்
புத்தம் புதியதாய்
நம் நட்பும் வளர்ந்ததடி!!

கல்லூரி செல்லும்
மாணவி என்றாலும்
தாய்க்குரிய கனிவும்
அன்பும் உன்னிடம் 
என்னை கவர்ந்ததடி!!

குடும்பத்தை விட்டு
பிழைப்பிற்காய் நான் 
வெளியூரில் இருந்தாலும்
உன் நட்பு இருந்ததினால்
பிரிவும் தெரியவில்லை எனக்கு!

ஒவ்வொரு நாளும்
என்னைப் பற்றிய 
விசாரிப்புக் களுக்காகவே
தினமும் என் கடமையினை
தவறாது முடித்திடுவேன்!!

வேலைப் பளு
மிகுந்து அதனை
என்னால் முடிக்க முடியுமா
என்றெண்ணி உட்கார்ந்திடும் போதும்
உன்னால் முடியும் முயன்றுப் பார்
என்னை வார்த்தையினால்
தோளில் தட்டியவள் நீ!!!

தகுதிக்கு மீறி முயன்று
பெரும் இழப்பை சந்தித்து
அழுதிட்ட வேலையிலும்
என்ன நடந்துவிட்டது
இன்னும் உயிரோடு தானே
இருக்கின்றாய், எழுந்திடு
என்று ஒரு தோழிக்குரிய‌
கடமையினை செவ்வனே செய்தாய்!!

மனம் சோர்ந்து 
நான் இருக்கையிலே
எனக்கு புத்துயிர் 
தந்தது உன் வார்த்தைகளே..............

கல்லூரி படிப்பிற்காய்
ஹாஸ்டலில் சேருகின்றேன்
என்று சொன்னாய்
நானும் விடைக் கொடுத்தேன்
ஆனால் அதுவே
நம் நட்பிற்கு முடிவாகிவிட்டது!!

வாழ்க்கை எனும்
பயணத்தில் நாம்
எண்ணற்ற பலரோடு
அறிமுகம் ஆகி
நட்பாய் பழகினாலும்
விட்டு விலகிச் சென்ற‌
உன்னை மட்டுமே
மனம் மீண்டும் மீண்டும்
நாடுகின்றது தோழியாய்.................

உந்தன் நட்பினை
மீண்டும் அடைய‌ 
நான் எடுத்த முயற்சிகள்
பல என்றாலும்
ஒன்றும் பலனடையவில்லை....
எனினும்
ஆண்டுகள் கடந்தாலும்
தூரங்கள் இருந்தாலும்
நம் நட்பின் 
நினைவுகள் என்றென்றுன்
என்னுள் மாறாமல்  வாழும்.......

No comments:

Post a Comment