வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 17, 2014

தமிழீழம்...........தமிழீழம்..........

தமிழீழம்
நாங்கள் விலைக்கு
வாங்கிய பூமியில்லை
எங்கள் சகோதர சகோதரிகளின்
குருதியினை விலையாக கொடுத்து
அடைந்த புண்ணிய பூமியடா.......!

 குணிந்தே இருந்த‌
தமிழனை நிமிர்ந்து 
நடக்கச் செய்த பூமியடா!! 
பழம்பெருமை பேசி பேசி
வீணாய் சென்ற வாழ்வினில்
வீரத்தின் மதிப்பினையும்
தியாகத்தினையும் 
காணச் செய்த பூமியடா........
ஜாதி மத மோதல்களில்லாது
தமிழராய் தமிழராக‌ 
வாழச் செய்த பூமியடா.....
தூய‌ தமிழ் மொழியினையும்
வளரச் செய்து
தமிழரின் பண்பினையும்
காத்திட பூமியடா!!!!

யாசகம் கேட்போரில்லாது
வரதட்சனை சாவுகளில்லாது
வீரத்தில் விளைந்த‌
புண்ணிய பூமியடா!!!!

உலகமே எதிர்த்தாலும்
தமிழர் வாழ ஒரு 
சிறந்த கட்டமைப்பினை
பசியினால் மரணமில்லாத‌
வாழ்வு கொடுத்த பூமியடா!!

காமத்தை வளர்க்காது
தூய காதலை வளர்த்த‌
புண்ணிய பூமியடா........

தமிழ் தமிழென்று
மேடைப் பேச்சினில் மட்டுமல்ல‌
இலக்கியத்திலும் வாழ்வியலிலும்
சமூகத்திலும் தமிழினை
வளர்க்கச் செய்த பூமியடா......

பணத்திற்காய் அல்லாது
இனத்திற்காய்
உயிரையும் கொடுத்து
தமிழினத்தினை காத்திடும் 
புலிகள் கொண்ட பூமியடா..............

மரணமே என்றாலும்
தமிழினத்திற்காய்
புன்னகையுடன் ஏற்றிடும்
மாவீரர்கள் கொண்ட பூமியடா........

உலகிலுள்ள ஒவ்வொரு 
தமிழரும் வாழ‌ 
நினைத்திடும் ஒரு 
புண்ணிய பூமியடா........

இன்றுமென்றும்
தமிழரினை தூய‌
மொழிப் பற்றுடனும்
இனப் பற்றுடனும்
காதல் உணர்வுடனும்
தூய கலாச்சாரத்துடனும்
தூய தோழமையுடனும்
வாழ வளர வைக்க‌
களம் காண‌ 
துடித்திடும்  பூமியடா
 எங்கள் தமிழீழம்!!!1
புண்ணிய பூமியடா!!!!!

No comments:

Post a Comment