வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 14, 2017

காதலர் தின சிறப்பு கவிதை.....


மொழிகளால் அல்ல
விழிகளால் பேசி
என்னை தடுமாற
செய்கின்றாயடி பெண்ணே!!!!

Image may contain: one or more people and close-up


மகிழ்ச்சியையும்
காட்டுகின்றாய்
சிரிப்பாக விழிகளில்!!

கோபத்தையும்
காட்டுகின்றாய்
அனலாக விழிகளில்!!

ஏக்கத்தையும்
காட்டுகின்றாய்
ஏங்கும் விழிகளாக!!

காதலையும்
காட்டுகின்றாய்
அன்(ம்)பு விழிகளாக!!

காமத்தையும்
காட்டுகின்றாய்
காமனின் தூதுகளாக!!!

ஒட்டுமொத்த
என் காதலையும்
உள் வாங்குகின்றாய்
விழி யெனும்
கடலினில்@

No comments:

Post a Comment