>>>>>>>> என் கிறுக்கல்கள்
வார்த்தைகளில் கற்பனை சேர்த்து
அழகு சேர்த்திடுவதில்லை!
மனதின் ஆதங்கத்தை
கொட்டுகின்றேன் வெண் காகிதத்தில்!
காதலையும் காதலித்து
நட்பையும் நேசித்தே
எழுத்துகளை அழகாக்குகின்றேன்
பொய்களினால் அல்ல!
இயற்கை அன்னையையும்
சமூக நிகழ்வுகளையும்
கண்டு ரசித்து ஏங்கியே
எழுத்துகளை தீட்டுகின்றேன்!
என் எழுத்துகள்
கவிதைகள் அல்ல
என் மனதின்
கிறுக்கல்களே……………..
No comments:
Post a Comment