வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, June 8, 2018

காதல்…… காதல்…..காதல்

>>>>>>>>> காதல்…… காதல்…..காதல்
ஆயிரக்கணக்கில் இனங்கள் இருந்தாலும்
அனைத்திற்கும் பொதுவான
ஓரினம் காதலே!
கணக்கற்ற மொழிகள் இருந்தாலும்
உலகெல்லாம் எல்லா மொழிகளிலும்
சிறந்த சொற்றொடர் காதலே!
உலகெல்லாம் இயற்கை சூழல்
மாறுப்பட்டிருந்தாலும் எங்கும்
என்றும் மாறுபடாது வாழுவது
காதலென்ற ஒரே சூழலே!
காற்று மாசுப்பட்ட இடங்களிலும்
மாசில்லாது தெளிவானது
இதயங்களில் வாழும் காதலே!
காதல் காதல் காதல்
உலகெங்கும் அல்ல!
உயிருள்ள இடங்களிலெங்கும்!
உயிர்களை நேசிக்க வைப்பதும்
காதலே!
வாழ்க்கையினை இனிமையாக வைப்பதும்
காதலே!


ஆதிமனிதனை சிந்திக்க வைத்ததும்
காதலே!
காட்டுமிராண்டியை நாகரீக
மனிதனாக்கியதும் காதலே!
இயற்கையையும் பெண்ணையும்
இணைத்து கவிப்படைத்திட
ஆண்களை கவிஞனாக்கியதும் காதலே!
காதலில்லாத ஜாதியுமில்லை
காதலில்லாத இனமுமில்லை
காதலில்லாத உயிர்களுமில்லை!
பறவைகளின் குரல்களில்
தெரிவதும் காதலே
விலங்குகளில் பலத்தில்
தெரிவதும் காதலே!


கடவுளில்லாத இனங்களுண்டு
ஆனால் காதலில்லாத
ஜனங்களு மில்லை!
காதல் காதல் காதல்
உலகெங்கும் என்றும் இளமையாய்!
காதலை சுவாசித்திடுவோம்
வருடிடும் தென்றல் காற்றாய்!

No comments:

Post a Comment