வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, May 8, 2019

பெண்ணே நீ சக்தியடி....


பெண்ணே
நீ மலர் மட்டுமல்ல
முள்ளும் உன்னிடமுண்டு

நீ மென்மை மட்டுமல்ல
உறுதியும் உன்னிடமுண்டு

பெண்ணே நீ சக்தியடி
சக்தியில்லாமல் சிவனுமில்லை

உன்னால் முடியும்
பெண்ணே உன்னால் முடியும்
அன்பிற்கு அடிமையாகிடும்
பெண்ணே பெண்ணே
உன் நேசம்
புறக்கணிக்கப்பட்டால்
உன் மதிப்பான
கண்ணீர்களை வீணாக்காதே

உன்னை புறந்தள்ளியவனை
காலடி மண்ணாய்
உதறிவிட்டு முன்னேறு
அவன் பார்வையிலேயே
வாழ்ந்துக் காட்டு
அவன் பொறாமையடைந்திடும் படிக்கு!



கீழிருக்கும் வரை
உன்னை காணாது சமூகம்
மேலே வா
உயர்ந்து வா
முன்னேறி வா
உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

மலராயிருந்தால்
தேனருந்த வந்திடும் வண்டுகள்
முள்ளையும் காட்டு
அன்பு மட்டுமல்ல
அதிகாரத்தையும் காட்டு
பெண்ணே நீ சக்தியடி

ஓர் உயிரையே
பாதுகாத்து
அதை முழுமையாக
உலகிற்கு தருகின்றவள் நீ
உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

உன் விழிகளில்
கனிவும் அன்பும் மட்டுமல்ல
கண்டிப்பும்
எரித்திடும் வீரமும் தெரியட்டும்
கண்ணகியும் ஒரு பெண்
தெரசாவும் ஒரு பெண் தான்
பெண்ணே உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

நீ மென்மையானவள் தான்
ஆனால்
புலியை விட
வன்மம் உள்ளவள் நீ
புன்னகைக்கவும் தெரியும் உனக்கு
எரித்திடவும் தெரியும் உனக்கு
பெண்ணே நீ சக்தியடி!!!

மூடர்களின்
வீண்பேச்சினை
செவிகளில் ஏற்றாமல்
அவற்றிற்கெல்லாம்
பதிலுரைக்காமல்
தலை நிமிர்ந்து வாழடி
பெண்ணே

எரிந்திட பிறந்தவளல்ல நீ
மடமைகளையும்
பேதமைகளையும்
எரித்திட பிறந்தவள் நீ!!!

மதஜாதி பொய்களை
களைந்து
சக்தியெனும் உடையணிந்து வா
நீ வாழலாம்
வானுயர வளரலாம்!!!1

மணந்தவன் மரணித்தாலும்
தலைக் குனியாதே
குனிய குனிய கொட்டுமடி
இவ்வுலகம் உன்னை
தலை நிமிரடி பெண்ணே
வந்து பிறந்துவிட்டாய்
வாழ்ந்துவிடு வாழ்க்கையினை
பிறர்க்காக அல்ல
உனக்காக வாழக் கற்றுக்கொள்

பெண்ணே நீ சக்தியடி

No comments:

Post a Comment