வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, March 20, 2010

எனது கல்லூரி வாழ்க்கை



எங்கிருந்தோ வந்தோம்
கல்லூரியெனும் விருட்சத்திற்கு
வாழ்க்கைப் பயணத்தில்
மூன்றாண்டுகள் இளைப்பாற!!

நண்பா என்றழைத்து
நட்பை பரிமாறினோம்
ஒன்றாய் வேறுபாடில்லாது
பார்த்து ரசித்தோம்!!

ஆசிரியர் நடத்திய‌
பாடத்தை விட‌
நாம் பேசிய‌
வார்த்தைகளே அதிகம்!!

நம்பெற்றோர் ஒன்றாய்
சம்பாதிக்கவில்லை யென்றாலும்
நாம் ஒன்றாய்
சேர்ந்து செலவழித்தோம்!!!

ஆசிரியருக்கு நம்பெயர்
தெரியுமோ இல்லையோ
நாமே பெயரிட்டு
அழைத்தோம் நாமின்பமடைய!!!!

நாம் இன்பத்தை
மட்டுமல்ல ஆசிரியரின்
தண்டனையையும் சேர்ந்தே
நாம்அணு பவித்தோம்!!!


காதலில்நாம் வெற்றி
பெற்றோமோ இல்லையோ
காதலர்தினத் தையும்சேர்ந்தே
கொண்டாடினோம் கட்டடித்து!!!!

ஆசிரியருக்கு நாம்
எப்படியோ ஆனால்
நம் பார்வையில்
"சுதந்திரப் பறவைகள்" நாம்........


இன்று :::

கல்லூரியெனும் விருட்சத்தில்
இளைப்பாறியது
மூன்றாண்டுக ளென்றாலும்
இன்றும்
நம் கல்லூரி வாழ்வை
நினைத்தால்
மனதில் ஓர்
சுகமான இளைப்பாறுதல் தானடா....



No comments:

Post a Comment