வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Tuesday, February 23, 2010

என் காதல்

என் இனியவளே,

நீ சைக்கிளில்
செல்லும் போது
நானுன்னை முந்தி செல்வது
நீ என்னை
காண் வேண்டுமென்றல்ல‌
"அந்த ஒரு நொடியில்"
நம் நிழல்கள் ஒன்றாக
இணைய வேண்டுமென்று தான்........

நின் பெயரை
எழுதினேன்
கவிதை என்றனர் நண்பர்கள்
நின் பெயரை
எழுதி எழுதி
என் கையெழுத்தும் அழகானது

நான் நண்பர்களுடன்
கூட்டமாக பேசினாலும்
நீ கடந்து செல்லும் போது
என் மனம்
என்னையும் மீறி
உன்னிடம் பேசுகின்றது
உனக்கும் தெரியாமல்.......

உன்னிடம்
ஒரு முறை
என் காதலைச் சொல்ல
பல முறை வீட்டுக்
கண்ணாடி முன்
சொல்லி சொல்லி
என் வீட்டு நிலைக் கண்ணாடியும்
வெட்கப்படக் கற்றுக் கொண்டது.........

நான் கொண்ட
காதலை
மழையாய் பொழிய‌
காத்திருந்தேன்
நாட்களாய் அல்ல‌
மாதங்களாய் அல்ல‌
வருடக் கணக்கில்........

உனக்காக எல்லாம்
செய்வேன் உனக்காக‌
கடைசியில் என்
ஒரு தலைக் காதலை
மறைத்துக் கொன்றதும்
உனக்காகத் தான்
எனில்
உன் காதல்
வாழ வேண்டுமென்று தான்
.......

No comments:

Post a Comment