வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, March 14, 2012

பிரிவின் கொடுமை......


என்னவளே,
நான் பேசும்
சொற்களிலும்
நான் காணும்
காட்சிகளிலும்
நான் செல்லும்
வழிகளிலும்
என் இரவினில்
கனவாக‌
என் இதயத்தில்
துடிப்பாக‌
நீ என்னுடன்
இல்லா விட்டாலும் கூட‌
நின் நினைவுகள்
என் ஒவ்வொரு
அசைவுகளிலும் அணுக்களாக‌....



நின் நினைவுகள்

சில நேரங்களில்

சுகமாகவும்
சில நேரங்களில்
சுமையாகவும்
சில நேரங்களில்
அமைதியாகவும்
சில நேரங்களில்
பரபரப்பாகவும்
சில நேரங்களில்
உணர்வுகளாகவும்
சில நேரங்களில்
உணர்ச்சிகளாகவும்
சில நேரங்களில்
சிரிப்பலைகளாகவும்
சில நேரங்களில்
வெடித்திடும் அழுகையாகவும் 

என்னுடல்

பணியில் பணிப் புரிந்தாலும்

இதயம் உன்னை
நினைப்பதையே அதன்
வேலையாக கொண்டு துடிக்கின்றது.......
காற்றை விட‌
நின் நினைவுகளையே
அதிகம் சுவாஷிக்கின்றது........ 


நீ என்னுடன்
இல்லாத போதும்
நீ என்னை
வெறுத்து மறந்த போதும்
நின் நினைவுகள்
உன்னையே நினைக்கத்
தூண்டிக் கொண்டிருக்கின்றது.........
உன்னால் மட்டும் எப்படி

வாழ முடிகின்றது????????

நானில்லாமல்
என் நினைவுகளில்லாமல்.......


தோல்விகள் நஷ்டங்கள்
இழப்புகள் ஏமாற்றங்கள்
மரணங்கள் மாற்றங்கள்
எல்லாம் பலப்பல
நான் கண்டுள்ளேன்
என் வாழ்வில்.......
அப்போதெல்லாம்
இழந்ததைப் பற்றியெல்லாம்
கவலைக் கொண்டதேயில்லை
" இதுவும் மாறும்"
என்ற நம்பிக்கையில்.....
ஆனால் அதெல்லாம் விட‌
கொடுமையிலும் கொடுமை
இந்த பிரிவின் கொடுமை.......
அதிலும்
பிரிவினில் பிரிந்ததைப் பற்றி
சிந்திப்பது நினைப்பது
ஒவ்வொரு நிமிடமும்
மரண வேதனை தான்......




No comments:

Post a Comment