வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, August 12, 2016

இது தான் வாழ்க்கை


அழகாய் ரோஜா மலரிருக்க
முள்ளை கவனிப்பதும் ஏனோ????
அழகாய் நிலவு இருக்க
இருளை கவனிப்பதும் ஏனோ?????

தென்றலாய் வனம் இருக்க
தனிமையை கவனிப்பதும் ஏனோ????
வாழ்க்கையில் நிறைகள் நிறைந்திருக்க
குறைகளை மட்டும் கவனிப்பதும் ஏனோ?????

வாழ்ந்திடும் வாழ்க்கையில்


குறைகளை யல்லாது


நிறைகளை கண்டு


ரசித்து மகிழ்ந்து


தானும் மகிழ்ந்து


பிறரையும் மகிழ்விப்பதுவே


சிறப்பான வாழ்க்கை


யுகாயுகங்கள் மனிதனை
படைத்திடும் இறைவனால் கூட
இன்னும் குறைகளில்லாத
மனிதர்களை படைத்திட
இயலவில்லை என்பதும்
இறைவனின் குறை தானே!!!

கருவில் இன்னும் தோன்றாதவனே
குறைகளில்லாத மனிதன்
குறைகளை கண்டு கண்டு
நிறைகளை பாராது
மனம் வெறுப்பதும் ஏனோ?????????

வாழ்க்கையை அழகான
கட்டிடமாகவும் மாற்றலாம்
நிறைகளை மட்டும் கண்டால்!!!!
அழகான கட்டிடமான வாழ்க்கையை
அழித்து சிதைத்து
குப்பை மேடாகவும் மாற்றலாம்
குறைகளை மட்டும் கண்டால்!!

துடித்திடும் இருதயம்
நின்றிடும் வரையிலே
வாழ்க்கை என்பதை மறந்து
நிறைகளை பாராது
குறைகளை மட்டும் கண்டு
தானும் வெறுத்து தன்னை
பிறரும் வெறுக்க செய்திடும்
இழி வாழ்க்கை தேவையா????????

No comments:

Post a Comment