வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, August 19, 2016

விழிகளின் அழகு





மொட்டை மாடியில்
அன்னாந்து பார்த்து
ஒற்றையாய் வீற்றிருக்கும்
வெண்ணிலவை ரசித்து
கொண்டிருந்தேன்!
இருளில் மின்னல்
கீற்றாய் வெளிவருவது போல
இமைகளில் இருந்து
சீறி வந்திடும்
விழிகளை கண்டவும்
தன்னிலை மறந்தேன்!!
விழிகளா இல்லை
விீழ்த்திடும் வலையா
விழிகளில் தெரிவதை 
அறிய நினைத்தேன்
ஆனால் இறுதியில்
எனக்கென்ன ஆனது
என்றே அறியாதவனாய்
மூழ்கிவிட்டேன்
விழியெனும் அலைகளுக்குள்!!!
கரும்விழிகளுக்குள்
தெரிந்திடும்
ஒளிக் கீற்று
காண்பவரை யெல்லாம்
மெய் மறக்க செய்கின்றதே
நின் விழி பேசிடும்
மொழிகளுக்கு
அர்த்தம் தெரியவில்லை
எனக்கு

No comments:

Post a Comment