வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Friday, August 12, 2016

வார்த்தைகள்

வீழ்ந்தவனையும்
மீண்டு எழ
வைத்திடும் சிலரின்
வார்த்தைகள்!!!

அழுபவனையும்
ஆறுதல்படுத்திடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!!

குழப்பத்தில் இருப்பவனையும்
தெளிய வைத்திடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!

துயரத்தில் இருப்பவனை
தேற்றி ஆறுதலாக்கிடும்
சிலர் பேசும்
வார்த்தைகள்!!!!

வார்த்தைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

சிலரின் வார்த்தைகள்
துயரத்தில் ஆழ்த்தும்!
சிலரின் வார்த்தைகள்
நிற்பவனையும் சோகத்தில்
ஓய்த்திடும்!!!

சிலரின் வார்த்தைகள்
சிரிப்பவனையும் சிந்திக்க
வைத்திடும்!!

சிலரின் வார்த்தைகள்
மென்மையான இதயத்தையும்
பட்டயமாய் குத்தி கிழித்திடும்!!

No comments:

Post a Comment