வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, April 1, 2017

சிறு கிறுக்கல்...............

*** சிறு கிறுக்கல் *****
கேட்கத் தான் நினைக்கின்றேன்
கேட்கத் தான் முடியலையே
சொல்லத் தான் நினைக்கின்றேன்
சொல்லத்தான் முடியலையே


சொற்கள் வெளிவராது
வாய்க்குள் போராடுகின்றதே
உன்னருகில் வந்துவிட்டேன்
கேட்கவும் முடியலையே
கேட்காமலும் விலகிசென்றிடவும்
வழி யில்லையே பெண்ணே
உன்முன்னால் நின்றிடும் பொழுது
காற்று கலைத்திட்ட மேகமாய்
கலைகின்றது என் எண்ணங்கள்
ஆனாலும் ஆனாலும்
சொல்லிடவே எண்ணுகின்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.

உன் கூந்தலில்
விழுந்த மலர்களை
குப்பையில் எடுத்துப் போட
நீ செய்வாயா அல்லது
நானே செய்யவா என்று
கேட்டிடவும் சொல்லிடவுமே எண்ணுகின்றேன்

No comments:

Post a Comment