வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Saturday, April 15, 2017

இழிப்பிறவி நீயடா????????



மானிடனே மானிடனே
என்னதோர் இழிப்பிறவி
நீயடா
ஆறறிவு இருந்தும்
மருத்துவர் மாணவர்
வியாபாரி ஆசிரியர்
எனப்பல பெயர்களை
சூட்டிக் கொண்டு
நீ உலகை வலம்வந்தாலும்
எல்லாம் மிருகங்களின்
குணத்தையும் தானடா
உள்ளே வைத்து
சுற்றிக் கொண்டிருக்கின்றாய்
மிருகங்களுக்கும்
இல்லாத குணங்களையும்
அல்லவா நீ
மனிதனெனும் போர்வைக்குள்
மறைத்து வலம்வருகின்றாய்!!


பொறாமையும் வஞ்சனையும்
பொய்யும் இகழ்ச்சியும்
நினைச்சது நடக்கவில்லையென்றால்
ஊரெல்லாம் தூற்றித் திரிவதும்!
முன்னே சிரித்துப் பேசுவதும்
பின்னே துரோகம் செய்வதும்

                               
நண்பனென்று சொல்லி கைக்கொடுப்பதும்
காலுக்குள் குழி தோண்டுவதும்
என்ன இழி குணமடா
உன் குணம்
மிருகங்களே மிருகங்களே
காட்டிற்குள்ளேயே இருந்திடுங்கள்
வெளியில் வந்திட வேண்டாம்
இந்த மானிடர்களின்
குணங்கள் உங்களையும்
அண்டிடுமே

No comments:

Post a Comment