வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Monday, April 3, 2017

நீ எங்கே என் அன்பே

** நீ எங்கே என் அன்பே ******
விழிகளின் சங்கமத்தில்
விதையாக்கிய என் காதல்
உணர்வுகளின் மீட்டலில்
வளர்த்திட்ட என் காதல்

தனிமையிலும் நிழலிலும்
பேசிபேசி உருவாக்கிய காதல்
கரங்களின் வளையோசையில்
இசைத்து மகிழ்ந்த காதல்!
பூமிப்பந்து அவளை
சுமந்திட்டாலும் அவளின்
நிழலையும் சேர்த்து சுமந்தேன் நான்
என்னிதயத்தில் மகிழ்வாக!!

                               
இதயத்தில்
சிறைப்பிடித்தேன்
காதலியாக அவளை!
மீட்டு கொண்டார்கள்
அவளை மட்டுமல்ல
என் காதலையும்
களவாடி சென்றே
நீ எங்கே
என் அன்பே!
நீயிலாவிட்டாலும்
என் காதலை
திருப்பிக் கொடுத்திடு
நின் நினைவுகளோடு
நான் வாழ்ந்திட

No comments:

Post a Comment