வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 19, 2015

"இது தான் இந்தியாவின் சட்டமா........"

ஆயிரக் கணக்கில்
வீட்டை வைத்து
நகையை வைத்து
கடன் வாங்கி
வாழ்க்கை நடத்திடும்
மனிதர்கள்
கடனை திருப்பி தர‌
இயல வில்லை யென்றால்
புகைப்படத்துடன் விளம்பரம்
செய்து சொத்தையும்
பறிக்கும் வங்கிகள்........

கோடிக் கணக்கில்
கடன் வாங்கி
கட்டா விட்டாலும்
அவர்களின் படத்தினை
போடுவதில்லை......
சொத்தினை ஏன்
பறிமுதல் செய்வதுமில்லை.......
ஏனோ........ ஏனோ

இது தான்
சம தர்மமா.......
இது தான்
இந்தியாவின் சட்டமா........
சட்டம் ஏழைகளை
மட்டும் தான் ஊனமாக்கிடுமா..........
        


13.03.2015 தினமலர் செய்தி ::::::

                   "தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ள, முதல், 50 நிறுவனங்களின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகளுக்கு செலுத்தாத வராக் கடன் தொகை, 40,528 கோடி ரூபாய் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., மற்றும் வெளிநாட்டு வங்கிகளைத் தவிர்த்து, பிற வங்கிகளின் வராக் கடன் விவரங்கள் இவை என்றும், வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முதல் இடத்தில் உள்ளது."

No comments:

Post a Comment