வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 19, 2015

எதிர்பார்ப்புகள் :::::::::::::::

செயலின் முடிவினை
நன்றாகவே முடிக்க
எண்ணுகின்றோம்.....ஆனால்
முடிவோ முடிவின்றி
மாறிடும் போது
செயல்கள் மட்டுமல்ல
நமது மனமும்
செயல்களை நிறுத்துகின்றது ஏனோ?????

எதிர்பார்ப்புகள் என்பது
பொய்யாகும் போது
செய்த செயல்களும்
பொய்யாய் மாறுகின்றது....
அதற்கான முயற்சிகளும்
கானல் நீராய்
மாறுவது ஏனோ?????

நினைத்தது
நடக்க வில்லை
என்பதை கூட‌
மனம் ஏற்க‌
தாமதிப்பது ஏனோ?????

செயல்களின் முடிவு
தோல்வி யென்றாலும்
நம் மனதை மட்டுமல்ல‌
உடலையும்
வருத்திடுவது ஏனோ?????

ஒன்றும் புரியவில்லை
எனக்கும் ஏனோ
மனதின் ஏக்கங்களையும்
சொல்ல தெரிவதில்லை
எனக்கும்................

No comments:

Post a Comment