வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, March 19, 2015

"வார்த்தைகள்"

எழுத்துக்களின் கூட்டணியே
வார்த்தை!.........
எழுத்தில் இருந்தாலும்
சொல்லில் இருந்தாலும்
வலிமையுடைவை தான்
வார்த்தைகள்........
சில நேரங்களில்
ஓய்ந்து இருக்கும்
மனிதனையும் தட்டி
எழுப்பிடும் சில
வார்த்தைகள்...........
சில நேரங்களில்
ஓடிக் கொண்டிருக்கும்
மனிதனையும் தட்டி
ஓய்த்திடும் சில‌
வார்த்தைகள்...............
எழுத்துக்களின் கூட்டணி
தான் வார்த்தை.....

சில நேரங்களில்
ஒட்டி உறவாடும்
உறவுகளையும்
தள்ளிட செய்திடும்
சில வார்த்தைகள்..........

தோளோடு தோள்
நிற்கும் நட்பினையும்
மனதினில் பிரித்திடும்
சில வார்த்தைகள்...............

வார்த்தைகள்
நமக்குள்
இருக்கும் வரை தான்
பலனற்றவை....
ஆனால் சொல்லிலோ
எழுத்திலோ
புறப்பட்டு விட்டால்
தனது வேலையினை
சிறந்தே முடித்திடும்
வார்த்தைகள்.......

எழுத்துக்களின் கூட்டணி
தான் வார்த்தை....

No comments:

Post a Comment