வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, September 7, 2016

என்ன மாயம் செய்தாயோ!!

என்ன மாயம் செய்தாயோ
என்னிதயம் எனக்காய்
துடித்தாலும் 

உன்னை நினைத்தே
துடிக்கின்றதே!!!!!


என்ன மாயம் செய்தாயோ

விழிகளில் எல்லாம்
உன்னுரு மட்டுமே
நிஜமாய் தெரிகின்றது!!!


என்ன மாயம் செய்தாயோ
பசியும் மறந்து
நினைவையும் இழந்து
உன்னையே நினைக்கின்றேன்……..


என்ன மாயம் செய்தாயோ
ஊர் சுற்றிதிரிந்திடும் நான்

உன்னையே சுற்றுவதும் ஏனோ


என்ன மாயம் செய்தாயோ
என் அன்பே
குறைகள் இருந்தாலும்
நிறைவாய் உன்னை
விரும்புகின்றேன் நான்



என்ன மாயம் செய்தாயோ
விழிகள் அழுதாலும்
இருதயம் மகிழ்ந்தாலும்
தேடுவது உன்னையே!!!

என்ன மாயம் செய்தாயோ
மனைவியாய் வந்தாய்
மோகத்தையும் தாகத்தையும்
தந்தாய் அன்பிலே வளர்த்தாய்
என்னையும் உன் குழந்தையாய்!!!!

No comments:

Post a Comment