வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Wednesday, February 27, 2019

அவளொரு அழகிய ராகம்

>>>>> அவளொரு அழகிய ராகம்

பெண்மையின் உருவமவள்!
சாந்தத்தின் உருவகமவள்!
அன்பின் அர்த்தமவள்!
மென்மையின் பிறப்பிடமவள்!
அழகின் அழகவள்!

கோபத்திலும் அன்பு மாறாதவள்
சண்டையிட்டாலும் பிரியாதவள்
விலகியே நின்றாலும் நெருங்கியிருப்பவள்!
எப்போதும் தாய்மையின் குணமுடையவள்!

அவள் விழிகளில் எப்பொழுதும்
அன்பும் பண்பும் நிறைந்தே
புன்னகை பூத்திடுமே!

அவள் செவ்விதழ்கள்
எப்பொழுதும் மென்மையுடன்
இனிமையாய் உண்மையை மட்டுமே
உரைத்திடுமே!

வாடிடாத மலரவள்
தேய்ந்திடாத நிலவு அவள்!
தெள்தேனினும் சுவையவள்!
எத்தனை முறை
வாசித்தாலும் மீண்டும்
வாசிக்க தூண்டிடும்
கவிதையவள்!
நான் மீண்டும் மீண்டும்
மீட்டிட நினைத்தே
என்னை மறக்க நினைத்திடும்
அவளொரு அழகிய ராகமவள்!

No comments:

Post a Comment